ராம்சரண் ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர் !!

ராம்சரண் ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர் !!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான 'RC 16' படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர்.‌ தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர். இப்படத்தை தனது முதல் திரைப்படமான 'உப்பென்னா' படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.‌ 'RC16' படத்தின் தொடக்க விழாவில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா…
Read More
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் இன் முதல் படத்தை வெளியிட உள்ளது

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் இன் முதல் படத்தை வெளியிட உள்ளது

  குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக்…
Read More
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

‘தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்! மிகச்சிறந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராப் மார்ஷல் இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய நடிகர்களுடன் பணிபுரிவதில் அவருக்கு உள்ள ஆர்வம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரைக் குறிக்கும் விதமாக, ‘நாட்டு நாட்டு நடிகர்கள்’ என்று பதிலளித்தார். இதுமட்டுமல்லாது, இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக அவர்களின் தோற்றம், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மற்றும் அசாதாரண நடன திறன்களைப் பாராட்டினார். இந்திய சினிமா உலக அளவில் வளர்ந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் இயக்குநர் ராப்…
Read More
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்

    இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரில் நடைபெற்றது.…
Read More
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது

* விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது* இந்தியா கடந்து உலகை திரும்பி பார்க்க வைத்த பான் இந்தியா திரைப்படம் “RRR” மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மற்றொரு பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். சரண் நடிக்கும் அடுத்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பென்னா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இளம் இயக்குனர் புச்சி பாபு சனா ராம்சரணை இயக்குகிறார். பான் இந்தியா எண்டர்டெயின்ருக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட அட்டகாசமான திரைக்கதையை இயக்குனர் தயார் செய்துள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்க, இப்படத்தினை விருத்தி சினிமாஸ் மற்றும்…
Read More
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

    Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளிலுருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள்…
Read More
வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR”  படக்குழு

வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR” படக்குழு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.   இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.   உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்.
Read More
ராஜ மவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அப்டேட்!- வீடியோ

ராஜ மவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அப்டேட்!- வீடியோ

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' வெளியாகவுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இரவில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். எந்த அளவுக்கு குளிர் இருக்கிறது என்பதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. தற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு அறிவித்துள்ளது. இதில் 50 நாட்களும் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியதாகத் தெரிவித்துள்ளது படக்குழு. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவருமே…
Read More