வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிர்களை ஈர்த்த பரோல்!

வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிர்களை ஈர்த்த பரோல்!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “பரோல்” தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். தொடர் குற்றங்கள் மூலம் குற்றவாளியாக சிறைவாசம் அனுபவிக்கும் அண்ணன், அண்ணன் மீது துளியும் ஈர்ப்பு இல்லாமல் கோபத்தில் இருக்கும் தம்பி என இரண்டு கதாபத்திரங்களின் வாழ்கை தான் கதை . இவ்விருவரின் தாய் இறக்க, அவர்களுடைய இறுதி சடங்கிற்கு அண்ணன் வர வேண்டும் என சுற்றி இருந்தோர் கூற, அதற்காக தனக்கு பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பரோல்-க்கு முயற்சிக்கும் தம்பி. அதனால் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வித்தியாசமான கதையமைப்பின் மூலம் கூற வருகிறது 'பரோல்' திரைப்படம். படத்தில் அண்ணன் தம்பியாக லிங்கா- கார்த்திக்யை தேர்ந்தெடுத்தது, முதல் பலம். இருவரும்…
Read More
“பரோல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

“பரோல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தின் டிரெயலர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. படவெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் கார்த்திக் பேசியதாவது... இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்ற உள்ளடங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும்…
Read More
‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி!

‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி!

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர். ’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் ஆர். ஸ் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ’பரோல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்ப்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. ’பரோல்’ படத்தை பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறுகையில், “இது நான் ரெண்டாவது முறையா இயக்குற முதல் படம். ஒரு 48 மணிநேரத்துல வியாசர்பாடில ஆரம்பிச்சு திருச்சி, மதுரை போயி திரும்பி விக்ரவண்டி, சேலையூர், வியசார்பாடின்னு வந்து முடியுற கதைல…
Read More