30
Oct
இயக்கம் - லிஜு கிருஷ்ணா நடிப்பு - நிவின் பாலி, அதிதி பாலன் இசை - கோவிந்த் வசந்தா கதை - காலம் காலமாக எளிய மக்களின் நிலம் பறிக்கப்படுவதும் அதற்கெதிராக அவர்கள் பொங்க ஆரம்பிப்பதுமே கதை. நிவின் பாலி ஒரு அத்தலெட் அவருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் கால் அடிபட எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்குகிறார். மலை கிராமத்தில் அவருக்கு வீட்டை சுற்றிய இடம் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கெதிராக அவர் என்ன செய்கிறார் கிரம மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுமையாக சொல்லியிருக்கிறார்கள். மலையாள படங்களுக்கு என இருக்கும் வழமையான திரைக்கதை மிக மெதுவாக நகரும் காட்சிகள், மனிதர்களின் இயல்பான வாழ்க்கை அதனூடே சொல்லப்படும் பிரச்சனை என கொஞ்சம் 80 களின் படங்களின் ஞாபகத்தை தூண்டுகிறது. படத்தில் அதிகம் தெரிந்த நடிகர்கள் நிவின் பாலி அதிதி பாலன். அதிதி பாலனுக்கு அதிகம் வேலையில்லை. வந்து போகிறார் அவ்வளவே. நிவின்பாலி…