பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா PRO- குணா.
Read More
‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

  இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி துஷாரா பேசியதாவது... 'நட்சத்திரம் நகர்கிறது' நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன். இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் பாருங்கள். நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது.. என்னாலயே இத நம்ப முடியல. விஸ்காம் படிக்கும் போது மெட்ராஸ் படம்…
Read More
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

  பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனுபாக்யராஜ், ப்ரித்விபாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள். திரைக்கதை வசனம், - தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்.. இயக்கம் - ஜெய்குமார். தயாரிப்பு- லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித். கலை…
Read More
சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் இயக்கம் : தமிழ் கதை : ‘வறுகறி’ - பெருமாள் முருகன் சிறுகதை இசை பிந்து மாலினி கேமரா - பிரதீப் காளிராஜ்   சேத்துமான் என தெரியப்படும் பன்றியை சமைத்து சாப்பிட சிலர் விருப்பபட அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது என்பது தான் கதை. உணவு அரசியலை பற்றி பேசிய முக்கியமான படங்களில் சேத்துமான் திரைப்படமும் ஒன்று. ஒரு பன்றி கறியை சாப்பிட எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது என்பதை காட்சிகள் மூலமாக விவரிக்க முயற்சி செய்துள்ளனர். அது பாராட்டுதலுக்கு உரியதே. பார்வையாளர்களும் பன்றி கறி மீதான அனுபவத்தை இந்த படம் மூலமாக தான் உணருவார்கள் என்னும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுயாதீன திரைப்பட உருவாக்குதல் முயற்சியில் இந்த சேத்துமான் உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களின் வரவு என்பது ஒவ்வொரு மொழிகளிலும் தேவையான ஒன்று. அது தான் அந்த மொழி மக்களின் நுட்பமான வாழ்வியல் முறையை…
Read More
சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

    நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.   இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel…
Read More
பா ரஞ்சித்தின் அடுத்த படம் ஒடிடியில்!

பா ரஞ்சித்தின் அடுத்த படம் ஒடிடியில்!

  இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை "சேத்துமான்" எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிந்து மாலினி இசயமைப்பாளராகவும், CS பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர் புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது. தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர். பல்வேறு…
Read More
கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன. இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ்படவிழாவில் வெளியிடப்பட்டது ,இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித்,தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி…
Read More
பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் சார்பில் அடுத்த படம்

பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் சார்பில் அடுத்த படம்

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகன் பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் T.N அருண்பாலாஜி இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது .அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும்,உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த…
Read More