‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

  மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசி, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். படத்தில் வரும் ஸ்லம் ஏரியா அதாவது குடிசைப் பகுதி உண்மையானது அல்ல. அது படத்திற்காக போடப்பட்ட செட். 7.5 ஏக்கர் வெற்று நிலத்தை தேர்வு செய்து குடிசைப் பகுதி போன்று செட் போட்டுள்ளனர். இந்த செட்டை போட 55 நாட்கள் ஆகியுள்ளது.  பார்த்தால் செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா செலவை பார்க்காமல் இவ்வளவு பெரிய செட் போட அனுமதி அளித்தாராம். வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு நிச்சயம் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான்  ‘வேலைக்காரன்’ படத்தின் அரங்கு உருவாக்க வீடியோ டிசம்பர் 10 அன்று யூடியூப்பில் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, “சினிமாவில் கலை இயக்கம் என்பது மிக முக்கியமான துறை. திரைக்கதையில் கதை…
Read More
அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே…
Read More
கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

இன்றைய இளைஞர்களிடம் ஒரு விஷயம் சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்றால் அதை சினிமாவில் பாடலாக வெளியிட்டால் போதும். அவர்கள் அதை உடனே ‘கப்’ என்று பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், சிறுமியர்கள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் அதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாமல் அவர்களாகவே பாட ஆரம்பித்துவிடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடி வெளிவந்த ‘பீப்’ பாடல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், அனிருத் அந்தப் பாடலுக்கு தான் இசையமைக்க வில்லை என்று சொல்லிவிட்டார். அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. இப்போது, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்ற பாடல் நேற்று ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டது. அந்தப்  பாடல் கருப்பானவர்களுக்கு ஆதரவான பாடல் என்பது தெரிகிறது. இருந்தாலும் அந்தப் பாடலில் ‘கலீஜு, கொய்யால’ என்ற வார்த்தைகள் இடம் பெற்று பாடலின் தரத்தை,…
Read More
வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வசூல் வேட்டை செய்ய தவறுவதில்லை. இதனால் விநிநோகிஸ்தர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ரெமோவின் மாபெரும் வெற்றியால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கான மார்க்கெட் பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் படங்களை வாங்க பெரிய நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக வேலைகாரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது என்று தயாரிப்பு நிறுவனமான ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் யூரோப் மற்றும் யூகே வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தியை ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.…
Read More
இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

போனவருடம் கோலிவுட்டில் வெளியாகி ஹிட் அடைத்த டிமாண்டி காலனொ படத்தை இயக்கிய அஜய் தற்போது கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் சார்பில் தயாரிக்கும் படமான ‘இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்; இப்படத்தில் நயன் தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தொடர் கொலைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்து கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சைக்கோ கொலையாளியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. சைக்கோ கொலை என்றால் எந்தவித காரணமும் இருக்காது. ஆனால், இந்த படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பின்னணி ரொம்ப அழுத்தமான காரணம் இருக்கும். சமுதாயத்தில் முக்கியமானவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட, அந்த கொலைகள் ஏன் நடக்கிறது,…
Read More