அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர். அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காத்திருந்து, கேட்டு ரசித்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.. இத்தகைய சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். டி இமான் இசையமைக்கு அண்ணாத்த படத்தின் இந்த…
Read More
நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

  கவின், விக்னேஷ் சிவன் உடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் " காத்துவாக்குல ரெண்டு காதல்". விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமல்லாது, நயன்தாரா உடன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது, விஜய் டிவி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான " லிப்ட்" திரைப்படம் விமர்சகர் இடத்தில் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கவினுடன்- பிகில் திரைப்பட தென்றல் அமிர்தா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.…
Read More
விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம். இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன் மெண்ட் சினிமாக் களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் படத்தின் வெற்றிக்கு இப்பவே உத்திரவாதம் தருவது போல படத்தின் இசைப் பணியை அனிருத் துவங்கியிருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங்க் எண்டெர்மெயிண்ட் விசயங்களோடு…
Read More
ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில்,…
Read More
‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

  மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசி, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். படத்தில் வரும் ஸ்லம் ஏரியா அதாவது குடிசைப் பகுதி உண்மையானது அல்ல. அது படத்திற்காக போடப்பட்ட செட். 7.5 ஏக்கர் வெற்று நிலத்தை தேர்வு செய்து குடிசைப் பகுதி போன்று செட் போட்டுள்ளனர். இந்த செட்டை போட 55 நாட்கள் ஆகியுள்ளது.  பார்த்தால் செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா செலவை பார்க்காமல் இவ்வளவு பெரிய செட் போட அனுமதி அளித்தாராம். வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு நிச்சயம் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான்  ‘வேலைக்காரன்’ படத்தின் அரங்கு உருவாக்க வீடியோ டிசம்பர் 10 அன்று யூடியூப்பில் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, “சினிமாவில் கலை இயக்கம் என்பது மிக முக்கியமான துறை. திரைக்கதையில் கதை…
Read More
அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே…
Read More
கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

இன்றைய இளைஞர்களிடம் ஒரு விஷயம் சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்றால் அதை சினிமாவில் பாடலாக வெளியிட்டால் போதும். அவர்கள் அதை உடனே ‘கப்’ என்று பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், சிறுமியர்கள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் அதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாமல் அவர்களாகவே பாட ஆரம்பித்துவிடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடி வெளிவந்த ‘பீப்’ பாடல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், அனிருத் அந்தப் பாடலுக்கு தான் இசையமைக்க வில்லை என்று சொல்லிவிட்டார். அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. இப்போது, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்ற பாடல் நேற்று ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டது. அந்தப்  பாடல் கருப்பானவர்களுக்கு ஆதரவான பாடல் என்பது தெரிகிறது. இருந்தாலும் அந்தப் பாடலில் ‘கலீஜு, கொய்யால’ என்ற வார்த்தைகள் இடம் பெற்று பாடலின் தரத்தை,…
Read More