நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! –  சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! – சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறுமணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் . சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி .ஆர் .பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர் .முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லைபாரதிக்கு வழங்கிய விஷால், உதடுகளில் தேங்கிய புன்னகையும், முகத்தில் தவழ்ந்த பெருமிதமும் மாறாமல், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்கு பெருமை…
Read More
மோடி கம்முன்னு இருக்கறது தப்புதானே? – பிரகாஷ் ராஜ் வேதனை!

மோடி கம்முன்னு இருக்கறது தப்புதானே? – பிரகாஷ் ராஜ் வேதனை!

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குடும்ப நண்பர் ஆவார்.கவுரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், கவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தை கடை பிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார் என கூறினார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை கண்டு பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மோடியின் மெளனம் பற்றிப் பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: நான்…
Read More
பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல்  ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது.இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர் தாமரை. பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார். நீயும் நானும்... (மைனா) கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே... (உத்தமபுத்திரன்) குக்குறுகுக்குறு... (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா) யாரோ யாரோ... (மீகாமன்) தேகம்…
Read More