‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தைப் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர் RJ பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான…
Read More
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படமே ‘கணம்’ – அமலா பேட்டி!

நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படமே ‘கணம்’ – அமலா பேட்டி!

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர் கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய் விட்டார். அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே மனதைத் தேற்றிக் கொண்டனர் 90களின் இளைஞர்கள். அழகு, திறமை என்ன இரண்டும் சேர்ந்த சரியான கலவையோடு இருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது தற்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். 🎭 ”தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும், விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்குக் கிடைக்கும் அன்பு, வரவேற்பு, ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது என் இல்லத்துக்கே திரும்பியதைப் போல இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் அமலா… ✍️ தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள்.…
Read More
மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

! இயக்கம் - விக்னேஷ் GS நயன்தாரா நடிப்பில் SR பிரபு தயாரிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் 0 2. ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் என்னவாகும் உலகம் என்பதை மறைமுகமாக ஒரு திரில்லர் படத்தில் வைத்து சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால்… சுவாசித்தல் பிரச்சனை இருக்கும் மகன் அவனது ஆபரேஷனுக்காக பஸ்ஸில் செல்லும் போது பஸ் நடுவழியில் மணல் சரிவு விபத்தில் சிக்கி கொள்கிறது பஸ்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் குறைய, நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட இன்னொரு காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகின்றாள் என்பது தான் கதை. நல்ல கதைக்கரு சமூகத்திற்கு சொல்ல வந்த விசயமும் நன்றாக உள்ளது ஆனால் வெகு மோசமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள், கவராத மேக்கிங் என படத்தை சொதப்பியிருக்கிறார்கள். ஒரு முன்னணி நாயகி, ஒரு பஸ்ஸிற்குள் நான்கு பேர்,…
Read More