பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

  தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது
Read More
என்னை நம்பியதற்கு நன்றி – பிரபாஸுக்கு பதிலளித்த ராஜமௌலி

என்னை நம்பியதற்கு நன்றி – பிரபாஸுக்கு பதிலளித்த ராஜமௌலி

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து பிரபாஸ் கொடுத்த பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. சமீபத்தில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார், இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். - " @ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ்…
Read More
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்த ஒற்றை படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். இதனால் பாகுபலி வெற்றிக்கு பின் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக சாஹோ என்கிற படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த தகவலை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சாஹோ படத்தில் தாம் இணைவது தமக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் என கூறப்படுவதால் அதற்கு இணையான வில்லன் கெட்டப்பில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Read More