இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான்- சுந்தர் சி

இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான்- சுந்தர் சி

ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின் வழங்க, கமர்ஷியல் காமெடி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெற்றிகரமான மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள படம் அரண்மனை 3. தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் அரண்மனை. திரைப்படம் நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில், குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையில் அரண்மனை 3 உருவாகியுள்ளது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலா ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரதில் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள்…
Read More
சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

மக்கள் ரசித்து கொண்டாடிய அரண்மனை 1 & 2 படங்களைவிட அரண்மனை 3 படம் வித்யாசமாகவும் மிகச் சிறப்பான கதை அம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அரண்மனை 3 ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கப் போவது உறுதியாகியுள்ளது. அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினந்தோறும் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்தி வைத்து பொதுமக்கள் பூஜை செய்து கலைந்து சென்ற பிறகே படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். அரண்மனை 3 படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு எதிர்பாராத அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்னும் ஊரில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் என்னும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை வேண்கனியர் பேலஸ். இந்த…
Read More
சார்பட்டா பரம்பரை – விமர்சனம்!

சார்பட்டா பரம்பரை – விமர்சனம்!

மெட்ராஸாக இருந்து சென்னையாக ,மா(ற்)றிய வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையாவிடம் நம் கட்டிங் கண்ணையா முன்பொரு முறை பேசிக் கொண்டிருந்த போது“உண்மையில், சென்னை நகரம் தொடங்கிய இடம் வடக்கு மெட்ராஸ்தான். அரசியலையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை வடக்கு மெட்ராஸ் என்பது மிகவும் துடிப்பான பகுதி. அதே வட சென்னையில்தான் உலகிலேயே அதிகமான ஜீவ சமாதி இருக்கும் இடம் என்பது தெரியுமா? ஆம்.விஞ்ஞானத்தையும் மெய் ஞானத்தையும் நன்கு உணர்ந்த சித்தர்கள் பலர், வட சென்னையில் தான் ஜீவ சமாதி அடைந்து உள்ளனர்” என்று சொல்லி இருந்தார். இப்படியாப்பட்ட வட சென்னையில்தான் ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றொரு கலாச்சாரம் மிகப் பிரபலமாக இருந்தது. அது போன்ற தொழில்ரீதியான குத்துச்சண்டை கற்றுக் கொடுத்து ஆக்ரோசமான போட்டிகளை நடத்துவதற்கென்றே சில அமைப்புகள் இருந்தன. இவற்றைதான் பரம்பரைகள் என்று வட சென்னைவாசிகள் சொல்வது வழக்கம். இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை’ போன்றவை ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றவுடன் உடனே நினைவுக்கு…
Read More
ஆர்யா நடிப்பில் பா இரஞ்சித் இயக்கி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ நியூஸ்!!

ஆர்யா நடிப்பில் பா இரஞ்சித் இயக்கி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ நியூஸ்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டும ல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்தி ருக்கிறார்கள். கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை யமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங்…
Read More
2021ல்  சம்மர் ஸ்பெஷலுக்காக பிரமாண்டமாய் தயாராகும் ‘அரண்மனை 3’!

2021ல் சம்மர் ஸ்பெஷலுக்காக பிரமாண்டமாய் தயாராகும் ‘அரண்மனை 3’!

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை3' உருவாகி வருகிறது. இப்படத்திற்காக சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. முதன்முதலில் சுந்தர்C யுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது. இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” action படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப்படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர்C, சம்பத், மதுசூதன்…
Read More
விஷால் & ஆர்யா இணைந்து நடிக்கும் படம் தொடங்கிடுச்சு!

விஷால் & ஆர்யா இணைந்து நடிக்கும் படம் தொடங்கிடுச்சு!

நடிகர் விஷாலும், நடிகர் ஆர்யாவும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் 2011-ல் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தைத் தவிர வேறு படங்களில் இணைந்து நடிக்கவில்லை. ‘இரும்புத்திரை’ படத்திலேயே ஆர்யாவை நடிக்க வைக்க விஷால் முயற்சி செய்தார். ஆனால், அப்போது பல படங்களில் ஆர்யா தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. ஆர்யாவுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடித்திருந்தார்.  இப்போது ஆர்யா, விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில்..! ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் நான்காவது படமாக இயக்கத்  தொடங்கி விட்டார். இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும். தமிழில் ‘லென்ஸ்’,…
Read More
ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா  தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப் புதிய படத்துக்கு 'கஜினிகாந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'பலே பலே மகாடிவோய்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும்  இருட்டு  அறையில்  முரட்டு  குத்துபடங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017)  இனிதே  நடைபெற்றது.  இப்படத்தில்  ஆர்யாவுக்குஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லுஅவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
Read More
“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்ற பாடலில் இணைந்திருக்கின்றனர். அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இத்திரைப்படத்தை வித்தியாசமான புரமோஷன் செய்யும் வகையில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ரியாக்ஷனை படம் பிடித்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டனர். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைத்து பாடியுள்ளார். சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர், சிவகுமார், ஆர்ஜே பாலாஜி, விஜய்சேதுபதி, ஆர்யா, விஷ்ணுவிஷால், ரம்யா நம்பீசன், சமுத்திரக்கனி, லிங்குசாமி ஆகியோர்களுக்கு கிப்ட் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் சிலருக்கும் இந்த…
Read More