ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது

ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது

*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!* ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்…
Read More
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !!

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !!

  Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Jammy குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிசம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. முதல் முறையாக கிராமத்து லுக்கில் ஆர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்பு ஆர்யா பிறந்த நாளில் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் அரசுப்பள்ளியில் படிக்கும் அந்த பகுதிகளில் வாழும் ஏழை…
Read More
நடிகர் ஆர்யா நடிக்கும் “ஆர்யா 34” பூஜையுடன் இனிதே துவங்கியது

நடிகர் ஆர்யா நடிக்கும் “ஆர்யா 34” பூஜையுடன் இனிதே துவங்கியது

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் “ஆர்யா 34” பூஜையுடன் இனிதே துவங்கியது நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் “ஆர்யா34” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. *ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படம் இன்று காலை எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. * சென்னை (அக்டோபர் 9, 2022): இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்த ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஆர்யா 34 படத்தை தயாரிக்கின்றன. “டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன்” என மாறுப்பட்ட படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி…
Read More
கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது. இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் யுவா கூறியதாவது.., இயக்குனர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. படதொகுப்பாளர் பிரதீப் கூறியதாவது.. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களை கொடுக்கும் ஒரு இயக்குனரிடம் பணிபுரிவது,…
Read More
நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக் !

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக் !

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கின் தோற்றம் ரசிகர்களை…
Read More
எப்படி இருக்கிறது “எனிமி” –   திரை விமர்சனம் !

எப்படி இருக்கிறது “எனிமி” –   திரை விமர்சனம் !

இயக்கம் - ஆனந்த்சங்கர் நடிகர்கள் - விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன் தாஸ் கதை : சிறு வயதில் போலீஸுக்கு பயிற்றுவிக்கப்படும் இரு சிறுவர்கள் வளர்ந்த பிறகு, எதிரெதிராக மோதுகிறார்கள். சிங்கப்பூரில் , மளிகை கடை வைத்திருக்கும் விஷால் அங்கு நடக்கும் ஒரு விபத்துக்கு காரணம் யார்  என தேடுகிறார். சிறு வயதில் தன்னுடன் பயிற்சி எடுத்த நண்பன் என்பது தெரிய வருகிறது. பின் இருவருக்கும் நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை. படத்தின் முதல் பத்து நிமிடம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. இரண்டு அறிவுஜீவிகள் அவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் அதில் யார் ஜெயிப்பார்கள் எனும் ஒன்லைன் எல்லாம் அட்டகாசமாக தான் இருக்கிறது. ஆனால் திரைக்கதையும் அதை படமாக்கிய விதமும் கொடூரமாகவிட்டது. விஷால் சிங்கப்பூரில் அறிமுகமாகும் காட்சிகள் அதன் பின்னணியான தமிழ் குடியிருப்பு, என எதுவுமே ஒட்டவில்லை சுவாரஸ்யமாகவும் இல்லை. படத்தின். ஆரம்ப…
Read More
வீட்டுக்கு வரும் அரண்மனை 3

வீட்டுக்கு வரும் அரண்மனை 3

மெகா ஹிட் திரைப்படம் ‘அரண்மனை 3’ ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12 அன்று வெளியாகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத்தயாரித்து வருகிறது. ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல  தரமானபடைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல  சிறந்த பொழுதுபோக்கு படங்களைசந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சுந்தர்.cயின்இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டநட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு அளிப்பதில் ஜீ5 மகிழ்ச்சி கொள்கிறது.  
Read More
மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் நடிகர் விஷால் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்திருந்தார் அந்த பேட்டியின் போது துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் நடந்த பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போது, மிஷ்கின் எனக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து விஷால் கூறியிருந்ததாவது.. ஜனவரியில் மீண்டும் துப்பறிவாளன் ஷூட்டிங் போகிறோம்.. ஏப்ரலில் படம் வந்து விடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டு விடக் கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும். VFF நிறுவனமே ஒரு…
Read More
எனிமி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

எனிமி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

  விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது , நடிகர்…
Read More
பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

அரண்மனை 3 இயக்கம் - சுந்தர் சி நடிப்பு - ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக். கதை - வழக்கம்போல் ஒரு அரண்மனை அங்கு ஒரு குடும்பம், சதியால் சாகடிக்கப்பட்டு பழிவாங்க துடிக்கும் பேய். அதிலிருந்து நல்லவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. அரண்மனை 1,2 பாகங்கள் பம்பர் ஹிட்டடிக்க, அந்த தைரியத்தில் மூன்றாம் பாகத்தை பெரும் பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எதை எடுத்தாலும் ரசிகர்கள் பார்பார்கள் என்கிற ஏளனம் திரைக்கதையில் தெரிவது சோகம். சுந்தர் சி படங்கள் எப்போதும் மக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்துவிடும். பேய் படமாகவே இருந்தாலும் படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையிலோ, காமெடி சுத்தமகா இல்லை, வெறும் நடிகர்கள் கோணங்கித்தனம் செய்து கொண்டு அங்காங்கே படம் முழுதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நமக்கு சிரிப்பு மட்டும் வரவே இல்லை. அரண்மனை படங்களில் காமெடியும் திரில்லும், சரிபாதையில் கலந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில்…
Read More