“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

அசோக் செல்வன் – ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இத்திரைப்படத்தை வித்தியாசமான புரமோஷன் செய்யும் வகையில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ரியாக்ஷனை படம் பிடித்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டனர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைத்து பாடியுள்ளார்.

சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர், சிவகுமார், ஆர்ஜே பாலாஜி, விஜய்சேதுபதி, ஆர்யா, விஷ்ணுவிஷால், ரம்யா நம்பீசன், சமுத்திரக்கனி, லிங்குசாமி ஆகியோர்களுக்கு கிப்ட் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் சிலருக்கும் இந்த கிப்ட் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டு இந்த பாடலில் இணைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் நாளை வெளியாகவுள்ள இந்த பாடல் இந்த படத்தின் புரமோஷனுக்கு மட்டுமே என்றும் படத்தில் இந்த பாடல் இருக்காது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இது குறித்து விளக்கிய ஞான்வேல்ராஜா, “தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில்  பெரும்பான்மை யானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள “மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற பரிசு பாடல்  படத்தில் இடம்பெறாத இந்த பாடல், ஒரு ப்ரோமோ பாடலாக வெளியாகிறது. இப்பாடலை உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடல் இன்று விஷுவலாக வெளியாக இருக்கிறது.

இப்பாடலில் நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், விஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என இயக்குநர் த.செ. ஞானவேல் தெரிவித்தார்.