ஷோபா – நினைவிருக்கா?

ஷோபா – நினைவிருக்கா?

அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் (மே1ல்) அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்... "தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேக கதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா... குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...? அந்த…
Read More
ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் இதே அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53. சில முகங்களை பார்த்தவுடன் விரும்பத் தோன்றி விடும்.. அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்து கிடந்தது. ஒரு கதா பாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா…
Read More
குடும்ப உறவை முழுமையாச் சொல்லும் அழகான படைப்பே –  “வேலன் ”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

குடும்ப உறவை முழுமையாச் சொல்லும் அழகான படைப்பே – “வேலன் ”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை மீனாக்‌ஷி ஏற்கனவே தனது அற்புதமான தோற்றத்தில், இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி. அவரது நடிப்பில் வரவிருக்கும் “வேலன்” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், திரைத்துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க வைக்க விரும்புகின்றனர். இது குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்.. “ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் சொன்னது தான். குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதுமே ஒருவர்…
Read More
நடிகையாக அறிமுகமாகவிருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகள் !

நடிகையாக அறிமுகமாகவிருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகள் !

தமிழில் பாக்யராஜின் மகள் தொடங்கி ஷங்கரின் மகள் அதிதி வரை பலரும் திரையுலகுக்கு வந்துக்கிட்டிருக்காய்ங்க. அவர்கள் வரிசையில் ராஜீவ்மேனனின் மகள் சரஸ்வதியும் முழு நேர நடிகையாகிறார். ராஜீவ்மேனன் கடைசியாக இயக்கிய ’சர்வம் தாள மயம்’ படத்தில் சரஸ்வதி ஒரு பாட்டு சீனில் ஆடியிருந்தார். இப்போ வசந்த் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். வசந்த் ரவி தரமணியில் அறிமுகமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த அருண் மாதேஸ்வரன் தான் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read More
தமிழ் பெண்ணாகிய நான்…!- துஷாரா பாண்டியன் மகிழ்ச்சி!

தமிழ் பெண்ணாகிய நான்…!- துஷாரா பாண்டியன் மகிழ்ச்சி!

தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை போக்கும் வகையில், தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப்பயணம் பலரையும் வியக்க வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரம் ஊரைச் சேர்ந்த இவர் “போதை ஏறி புத்தி மாறி” படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அன்புள்ள கில்லி” திரைப் படத்திலும் மற்றும் “கண்ணம்மா” குறும்படத்திலும் நடித்தார். 6 வருடங்களாக திரையுலகில் சரியான வாய்ப்பு தேடி, வெகு பொறுமையுடன் காத்திருந்து, கிடைத்த வாய்ப்பில் தன் திறமையை நிரூபித்து இன்றைக்கு நட்சத்திர நடிகையாக மாறியுள்ளார். தற்போது தமிழின் மிக முக்கியமான இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில்…
Read More
நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி  7 வருடம் நிறைவு!

நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி 7 வருடம் நிறைவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார் நிக்கி கல்ரானி. அதனை தொடர்ந்து பல தென்னிந்திய மொழி  படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தநிலையில் புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ரானி. அடுத்ததாக நிக்கிகல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது .
Read More
தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படும் ‘பிரியாலால்’!

தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படும் ‘பிரியாலால்’!

மலையாள நடிகையான பிரியால்லால் - தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஜீனியஸ் ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார். அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்து விட்டு இப்பொழுது, தெலுங்கு படமான 'குவா கோரிங்க' (Love Birds) படத்தில் அறிமுகமாகிறார். டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது . பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது . கல்லூரி காதலை மய்யமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன் சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . சமீபத்தில் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது . கொரோனா லாக் டவுண் காரணமாக படத்தின் வெளியீட்டு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு 'குவா கோரிங்கா'வை ஆவலுடன் காத்திருக்கிறார் பிரியாலால் . 'ஜீனியஸு'க்கு…
Read More
ஜெயில் மூலம் நாயகியான அபர்மதி!

ஜெயில் மூலம் நாயகியான அபர்மதி!

எங்க வீட்டுப் மாப்பிள்ளை" என்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர் நதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த அபர்நதிக்கு அடித்தது ஜாக்பாட். முதல் படமே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான "ஜெயில்" படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் பல நல்ல நல்ல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை அபர்நதி.
Read More
‘காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோக்கள்’- ஷீலா ராஜ்குமார் சர்டிபிகேட்!..

‘காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோக்கள்’- ஷீலா ராஜ்குமார் சர்டிபிகேட்!..

‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த ‘டூ லெட்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன.இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார். தமிழில் ‘டூ லெட்’, ‘திரௌபதி’ என ஒரு பக்கம் வெற்றிகளை தட்டிக் கொண்டே… இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார். சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக…
Read More
ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக் காலம் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இன்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,“தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.   கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை, அதற்கான…
Read More