கரகர கானக் குரலோன் கண்டசாலா!

கரகர கானக் குரலோன் கண்டசாலா!

மிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்.. கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் …..அதிலும் தன் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். தெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை… அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல். மேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு. இவரின் முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். அப்பா ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா. அப்பா இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி,…
Read More
சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் காமெடி படத்துக்கு பூஜை போட்டாச்சு!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் காமெடி படத்துக்கு பூஜை போட்டாச்சு!

ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்  பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.   36 வயதினிலே, மகளிர் மட்டும்,நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகவிருக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை…
Read More
நகைச்சுவைச் சக்ரவர்த்தி நாகேஷ்!

நகைச்சுவைச் சக்ரவர்த்தி நாகேஷ்!

கோலிவுட்டின் சார்லி சாப்ளின் என்று பெயரெடுத்த  நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933- ithee செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களைஅனுபவித்துள்ளார்.சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒருநாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார். அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர்…
Read More
இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

”கா….கா….கா….கா..”; ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் அதன் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி இன்றும் வசீகரிக்க வைக்கும் சி.எஸ்.ஜெயராமனின் குரல். தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான். ஆம் இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்… (சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) (அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மைத்துனர் CSJ என்பது அவருக்கான இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்…
Read More
எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்!

எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்!

எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். வசூலில் இதுவரை கண்டிராத சாதனை படைத்த அந்த படம் இப்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு மழையில் நனைகிறார்கள். படத்தை வினியோகித்தவர்களும் திரையிட்டவர்களும் லாபத்தில் திளைக்கிறார்கள். சமீப காலங்களில் ஒரு படம் வெள்ளி விழா காண்பதே அரிதாகி விட்டது. கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பாச மலர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மட்டுமே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. ஆனால் அந்த பெருமையும் எங்க வீட்டு பிள்ளையின் சாதனைக்கு நிகராகாது. எப்படி என்றால், அந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு தியேட்டரில் மட்டுமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடின. எங்க வீட்டு பிள்ளையோ மெட்ராசில் மட்டுமே கேசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களில் வெள்ளி விழா தாண்டி சக்கைபோடு போடுகிறது. இது தவிர மதுரை,…
Read More
50 ‘களின் கனவுக் கன்னி ‘அஞ்சலி தேவி’

50 ‘களின் கனவுக் கன்னி ‘அஞ்சலி தேவி’

இன்னியில் இருந்து 70 வருஷங்களுக்கு முன்னாட்டி அதாவது 50 களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னி அஞ்சலிதேவி- என்ற பேர் கொண்ட ஹீரோயின் இதே நாளில்தான் காலமானார் . அதையொட்டி சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிற்காக கட்டிங் கண்ணையா செகரித்த செய்திகள் இக்குழு உறுப்பினர்களின் பார்வைக்கும்.. அஞ்சலிக்கும்.. அஞ்சலி தேவி அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருடன் நடித்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் ஜெமினி கணேசனுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரு டன் இவர் இணைந்து நடித்த ‘சர்வாதி காரி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மன்னாதி மன்னன்’ போன்ற படங்கள் பெரும் வெற்றியை கண்டன. ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படியாப்பட்ட அஞ்சலி தேவி நடிகைகளின் பிறப்பிடமான ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் -ங்கற வில்லேஜில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில்…
Read More
கோலிவுட்டின் முதல் காமெடி ஹீரோ டி.ஆர்.ராமச்சந்திரன்!

கோலிவுட்டின் முதல் காமெடி ஹீரோ டி.ஆர்.ராமச்சந்திரன்!

டி. ஆர். ராமச்சந்திரன் இன்னிய யூத்-களுக்கு தெரியாத பெயர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனா கவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது. இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த ரியல் டி.ஆர்-தான். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான்.…
Read More
தமிழ்த் திரையின் வரலாற்று ஆவணமாக இருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன்!

தமிழ்த் திரையின் வரலாற்று ஆவணமாக இருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன்!

✍🏼இப்போது தமிழ் சினிமா பற்றிய விவரங்களும், தகவல்களும் இன்றைக்கு உள்ளங்கை போன் வழியே எளிதாகக் கிடைப்பதற்கு அடித்தளமிட்டவர் ஆனந்தன். ஆம்.. தமிழ் சினிமா பற்றித் தொடக்க காலம் முதல் பல்வேறு தகவல்களும் புகைப்படங்களும் கூகுளில் கிடைப்பதற்குக் காரணம் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவை அனைத்தும் அவர் தனிநபராகச் சேகரித்து வைத்தவை. அதுபோன்ற தகவல்கள்தான் இணையதளங்களில் இன்று பதிவுசெய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் அடிப்படை காரணகர்த்தாவான பிலிம் நியூஸ் ஆனந்தன் சேவையை அவரது மறைவு வரை தமிழ்த் திரையுலகமும் தமிழக அரசும் கெளரவிக்கவில்லை என்பதுதான் சோகம். அப்படியாப்பட்ட சாதனையாளர் பிறந்த நாளையொட்டி சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிற்காக சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா சேகரித்த செய்திகள் இதோ: இதுவும் கூகுளில் இருந்து சுட்ட தகவல்தான்; ஆனந்தன் ஒரு சில பேட்டிகளில் சொன்ன தகவல்களிது: ✍🏼உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்? 🎬நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். என் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் சென்னை…
Read More
சாகச ஒளிப்பதிவாளர் & கெளபாய் இயக்குநர் கர்ணன்!

சாகச ஒளிப்பதிவாளர் & கெளபாய் இயக்குநர் கர்ணன்!

அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இந்த கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன். சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம். அதே போல் மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட. தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன்…
Read More
மாபெரும் நடிகர் ரகுவரன்!

மாபெரும் நடிகர் ரகுவரன்!

வெறும் நடிகர் என்று கூறி விட முடியாத ஒரு மாபெரும் நடிகர் ரகுவரன். அவரைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவர் ஒவ்வொரு படத்திலும் பேசிய வசனத்தை வைத்து பக்கம் பக்கமாக விவாதிக்கலாம். அந்த அளவுக்கு பன்முகம் கொண்ட பிரமிப்பான நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவின் நீண்ட, நெடிய மனிதர்களில் ரகுவரனையும் சேர்க்கலாம். சத்யராஜ், வில்லனாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரகுவரன். ஆனால் அவருக்குள் இருந்த ஹீரோத்தனத்தை விட வித்தியாசமான நடிப்புத் திறன்தான் பின்னாளில் வென்றது. ஹீரோ வாய்ப்புகள் தன்னைத் தேடி வரவில்லையே என்று கவலைப்படாமல், சட்டென்று வில்லன் ரோல்களுக்கு மாறியவர் ரகுவரன். அவரது புதிய வகை வில்லத்தனத்தைப் பார்த்து ரசிகர்கள் புருவம் உயர்த்திப் பார்த்தனர். அவரது பாடி லாங்குவேஜ், வசனத்தைப் பிரித்துப் பிரித்து, நிறுத்தி, நிதானமாக பேசிய விதம், தமிழ் சினிமாவுக்கு படு வித்தியாசமானது. இந்த ஸ்டைல், ரசிர்களைக் கவரவே வேகமாக பிக்கப் ஆனார் ரகுவரன்.…
Read More