மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, விஜய்சேதுபதியும் இயக்குநர் நிதிலனும்.. இந்தப்படம் உங்களுக்கு ஒரு அனுபவம் தரும், பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருக்கிறது, தயவு செய்து அதை வெளிப்படுத்தி விடாதீர்கள், முதல் முறை பார்க்கும் அனைவருக்கும் அந்த அனுபவம் கிட்டட்டும் என்றனர். இந்தப்படம் பார்த்த போது கிடைத்தது ஒரு பேரனுபவம்.. எனக்கு விருமாண்டி பார்த்த போது அதன் உருவாக்கத்திலும், அபிராமி இறப்பு முதலாக பல காட்சிகளில் எனக்கேற்பட்ட பாதிப்பும், இந்தப்படத்திலும் பல இடங்களில் கிடைத்தது. சமீபத்தில் தமிழ் சினிமா பழைய மாதிரி இல்லையே என்று ஏற்பட்ட அத்தனை ஏக்கத்தையும், போக்கியிருக்கிறான் மாகாராஜா. கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் எப்படி அணுகப்பட வேண்டும். அதை எல்லாம் எப்படி ரசிகனுக்கு தர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுத்திருக்கிறது. இந்தப்படம். இதற்குமேல் படிக்காதீர்கள்.. தனது மகளை காப்பாற்றிய குப்பைதொட்டியை திருடர்கள் திருடிவிட்டதாக போலீஸுக்கு போகிறான் ஒரு சாதாரண சவரத்தொழிலாளி. அவனை பைத்தியமாக…
Read More
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும்…
Read More
இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை- காளி வெங்கட்

இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை- காளி வெங்கட்

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். நடிகர் காளி வெங்கட் பேசியதாவது.. இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படம் சிறப்பான படமாக வரும் நன்றி. இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா பேசியதாவது.. இயக்குநர் பெண்மையைப் போற்றும் கதாபாத்திரங்கள் எழுதுபவர் மட்டுமல்ல,…
Read More
ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் – ரோமியோ விஜய் ஆண்டனி !!

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் – ரோமியோ விஜய் ஆண்டனி !!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நடிகை மிருணாளினி ரவி, "'ரோமியோ' படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்றுதன கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள்…
Read More
பத்திரிக்கையாளரை கண்டித்த இயக்குநர் !!

பத்திரிக்கையாளரை கண்டித்த இயக்குநர் !!

பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து காரசாரமாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார் 96 பட இயக்குநர் ச பிரேம் குமார் இதோ அந்த கடிதம் அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், '96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. https://youtu.be/lqdaTuw3FsQ?si=6Z958bJXU5mtTyf. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார். குறிப்பாக, '96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை…
Read More