சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளை பெற்ற ‘தொரட்டி’

சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளை பெற்ற ‘தொரட்டி’

ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடு கிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகை யாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது : "ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீங்கன்னு நம்புறேன். தொரட்டி என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி ஆடு மேய்ப்பவர்களின்…
Read More
யாரையும் புண்படுத்தி நான் காமெடி பண்ணுவதில்லை – A1 ஹீரோ சந்தானம் ஓப்பன் டாக்!

யாரையும் புண்படுத்தி நான் காமெடி பண்ணுவதில்லை – A1 ஹீரோ சந்தானம் ஓப்பன் டாக்!

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'A 1'. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், 'நான் கடவுள்' ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம் பேசி முடித்தவுடன், 'பத்திரிகையாளர்கள் கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேளுங்கள்' என்று கூறினார். அப்போது சமீபத்தில் வெளியிடப்பட்ட 'A 1' டீஸர் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், “டீஸர் என்பது படத்தை டீஸ் பண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது. படமாகப் பார்க்கும் போது அது தெரியாது. காமெடி படம் என்றாலே ஒரு மோதல் இருந்தால் தான் அதை வைத்து காமெடி பண்ண முடியும். சார்லி சாப்ளின் தொடங்கி நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரை அதைத் தான் செய்திருக்கிறார்கள். நாம் செய்வதற்கு எதிர்வினையாக…
Read More
பயமில்லா மனிதநேயம் திரைப்பட விழா!

பயமில்லா மனிதநேயம் திரைப்பட விழா!

ஹிந்துஸ்தான் குழுமங்களின் நிறுவனர் கே சி ஜி வர்கீஸ் பெயரில் 2008 முதல் அவர்களது கல்லூரி வளாகத்தில் நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழாவினை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டில் மிகவும் பிரமாண்டமாக சென்னை சிட்டி செண்டர் வணிக வளாகத்தில் உள்ள ஐ நாக்ஸ் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். Fearless & Humanity என்கிற கருத்தை மையமாக வைத்து 14 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 திரைப்படங்கள் இன்றும் 24 & 25 ஜூலை 2019 நாளையும் திரையிடப்படவுள்ளன. ரசிகர்கள் இலவசமாக இந்தத் திரைப்படங்களைக் கண்டு மகிழலாம். இந்த விழாவினை இயக்குநர் இமயம் பாரதிராஜா , அமலா பால், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், இயக்கு நர் ரத்னகுமார் , ICAF தங்கராஜ் மற்றும் தைவான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேந்த தூதரக அதிகாரிகள் முறையே சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ கொல்லிஸ்டர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய…
Read More
மயூரன் கதைக் களம் என்ன தெரியுமா?

மயூரன் கதைக் களம் என்ன தெரியுமா?

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ), அஸ் மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ) படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது… “ சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே…
Read More
சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல ! – டி. சிவா எச்சரிக்கை!

சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல ! – டி. சிவா எச்சரிக்கை!

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே. பேசும்போது , "இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான்…
Read More
ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ”

ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ”

பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் இயக்குனர் ஆஸாத். ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப் பட்டத் திரைப்படம். சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். உலக அளவில் ரசிகர்களை பெற்ற படம் ராஷ்ட்ரபுத்ரா. இந்த படத்தை தயாரித்த நிறுவனம் பாம்பே டாக்கீஸ். சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் மூத்த நிறுவனமான பாம்பே டாக்கீஸ் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. தென்னிந்தியாவில் நிறைய நடிகர்களை…
Read More
300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு!

300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு!

டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். இந்த படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம் மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், கூர்கா மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய மான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். ஆம்.. தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளி யாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இன்று காலை சிறப்பு காட்சியியே…
Read More
பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப் படுத்தப்பட வேண்டும் – அரசுக்கு வைரமுத்து கோரிக்கை!

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப் படுத்தப்பட வேண்டும் – அரசுக்கு வைரமுத்து கோரிக்கை!

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான். வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில்…
Read More
களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்!

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்!

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம். பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இப்படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப…
Read More
கூர்கா -ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா?

கூர்கா -ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா?

இயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப் படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ கட்டமாகும். அவரது “100” திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படம் “கூர்கா” இந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. வேடிக்கை நிறைந்த டிரைலர் மற்றும் பெரிய பிரபலங்கள் பங்கு பெற்ற பாடல்கள் காரணமாக படத்திற்கு ஆடம்பரமான வரவேற்பு உள்ளது. காட்சி விளம்பரங்களை பார்த்த பிறகு இது மற்றொரு ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா என்பதை அறியும் ஆர்வத்தில் இயக்குனர் சாம் ஆண்டனை கேட்டால், அவர் கூறும் போது, “நிச்சயம் இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்கள் படத்தில் உள்ளன, ஆனால் படத்தின் முக்கிய மையக்கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக்கப் பட்டு உள்ளது.…
Read More