26
Mar
ஆல்ஃபா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’ ‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குனராய் பணியாற்றியவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ‘அன்னக்கிளி’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘உதயகீதம்’, ‘சின்னக் கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும், பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினேஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங், இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ, படத்தொகுப்பு –சேவியர் திலக், பாடல்கள் – கலை சாய் அருண், கலை இயக்கம் – க்ராஃபோர்டு, சண்டை…