நட்புக்காகவும், காதலுக்காகவும் உயிரையே கொடுப்பது போல் நடிக்கும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மதுரைக்காரர் சசிகுமார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் சசிகுமாரின் உறவினருமான அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். பசங்க, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களில் ஓரிரு காட்சியில் நடித்திருக்கிறார். இவர் சசிகுமாரின் உறவினரும் ஆவார். இவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல் இருக்கும் அவரது வீட்டில் நடந்து இருக்கிறது.
இறந்த அசோக்குமார் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பனி புரொடக்ஷன் அலுவலக நிர்வாகி யாகியானதால் கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.
தமிழ் சினிமாவின் முக்கிய பைனான்சரான மதுரை அன்பு என்பவர் கொடுத்த டார்ச்சரால் தான் அசோக் தற்கொலை செய்துகொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ன கோணத்திலும் போலீசார் விசாரணையை துவக்கியிருக்கின்றனர். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.
எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை. எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.
அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.
எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’. இப்படிக்கு பா. அசோக் குமா