உலகம் சுற்றும் வாலிபன் !💥   ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

உலகம் சுற்றும் வாலிபன் !💥 ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

முன்னொருக் காலத்தில் -அதாவது 48 வருஷங்களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த 'உலகம் சுற்றும் வாலிபன்' இன்றைக்கு ரி ரிலீஸ் ஆகப் போகுது.. தியேட்டர்கள் திறந்து பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில் பல நாளிதழ்களில் இப்பட வெளியீடுக் குறித்த விளம்பரம் மட்டுமே இடம் பெற்ரு வருவதைக் கண்டு கோலிவுட்டே மிரண்டு போயிருக்கிறதாம்.. இனி நம்ம கட்டிங் கண்ணையா ரிப்போர்ட் , தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல். இந்தத் திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதித்த அன்னிய செலாவணியைக் காட்டிலும் கூடுதலாக செலவான விவரம் வருமானவரித்துறையிடம் இருந்துச்சாம். அது அப்போது தேசவிரோத குற்றத்திற்கு…
Read More
MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான் கதை. முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து…
Read More