சிக்கலில் சிக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் பட தலைப்பு !

சிக்கலில் சிக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் பட தலைப்பு !

தினசரி வாழ்வில் இயல்பான 4 இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள்,  அவர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை,  சொல்லும் அழகிய திரை அனுபவமாக உருவாகியுள்ளது “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம்.  AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார். அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன்,  பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசை  வெளியீட்டு விழா சமீபத்தில்  நடிகர் கமலஹாசன் தலைமையில் நடந்தது. தற்போது இப்பட தலைப்பிற்கு சிக்கல் நேர்ந்துள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம் தான்   “சில நேரங்களில் சில மனிதர்கள்”. அதை அவர் படமாகவும் எடுத்தார். அப்போது அவரது மகள் தீபாலக்‌ஷ்மி இப்படதலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்…
Read More