07
Jul
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியவர் கே. வி. ஆனந்த். இவர் முதலில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமா மீது ஏற்பட்ட காதலால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டார். அப்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கே.வி.ஆனந்த்தை அணுகியிருக்கிறார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல்வன், பாய்ஸ் பாங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவு செய்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தை இயக்கிய இயக்குநராக அறிமுகமானார். இவர் பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சினேகா மற்றும் சாதனா…