07
Dec
'தாதா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி துரைராஜன் என்கிற ராகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார். அதில், தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மணி(Money) என்ற திரைப்படத்தை கடந்த 2016 ம் ஆண்டு தயாரித்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். அந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யாவும் மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, நாசர், சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்கிற கின்னஸ் கிஷோர், தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக வழக்கு ஒன்றை அவர் பதிவு செய்து இருக்கிறார். பின் வேப்பேரி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், திரைப்படத்தின் ஹார்ட்…