சஸ்பென்ஸ் திரில்லாராக உருவாகியுள்ள ‘அதோமுகம்’ !

சஸ்பென்ஸ் திரில்லாராக உருவாகியுள்ள ‘அதோமுகம்’ !

  அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.  ஹீரோ  தனது மனைவி  மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள். கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி  சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான…
Read More
நடிகர் அசோக் செல்வனின் திருமண செய்தி ! இந்த பிரபலத்தின் மகளை தான் கரம் பிடிக்கப்போகிறாராம்!

நடிகர் அசோக் செல்வனின் திருமண செய்தி ! இந்த பிரபலத்தின் மகளை தான் கரம் பிடிக்கப்போகிறாராம்!

இளம் தலைமுறை நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கவினை அடுத்து  நடிகர் அசோக் செல்வனின் திருமணம் குறித்தான செய்தி தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் நடிகர் அசோக் செல்வன் ’நித்தம் ஒரு வானம்’, ‘போர் தொழில்’ என தனது சமீபத்திய படங்களின் தேர்வு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். இவர் நடிகர் அஜித்தின் பில்லா 2 படத்தில் அஜித்தாக நடித்து அறிமுகமானார். இந்நிலையில், இவருடைய திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. விரைவில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் அல்லது அருண் பாண்டியன் தரப்பு வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Read More