விக்ரம் பிரபுவின் புதிய பட பூஜை – ‘பகையே காத்திரு’!

  • விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளியான படம் ‘புலிக்குத்தி பாண்டியன்’. நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தது. அதன்பின்னர் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தில் நடித்து வந்தார். அறிமுக இயக்குநர் கார்த்திக் சௌத்ரி இயக்கும் இப்படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

தற்போது தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். டாணாக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்ஆர் பிரபு சகோதரர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. சம்மரில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பகையே காத்திரு’ என வித்தியாசமான டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மாணிக்கவேல் இயக்கும் இந்த படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாம் சி.எஸ் இசையில் உருவாக இருக்கிற இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து ஷூட்டிங்கையும் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!