நடிகர் விஜய் சேதுபதி மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து விஜய் சேதுபதி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது, அணில் ப்ராடெக்ட் (ANIL PRODUCT) விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் (38,70,000) ரூபாயும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் (5,00,000) ரூபாயும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம்! – விஜய் சேதுபதி!
![](https://cinemapressclub.com/wp-content/uploads/2017/11/maxresdefault.jpg)
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்' ஐ திறந்து வைத்தனர்May 7, 2023
அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!June 13, 2023
இறுதிக் கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!August 22, 2017
பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!March 16, 2017
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !September 28, 2021