இயக்கம் – பிரசாந்த் நீல்
நடிகர்கள் – யாஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத்,
இந்தியாவின் கோலார் வயல் சுரங்கத்தின் பின்ணனியில் இதுவரை இந்தியா பார்த்திராத மாஸ் ஹீரோ படத்தைதந்திருக்கிறார் பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன் கருடனை கொன்று கேஜிஎஃப்பை கைப்பற்றிய ராக்கி அதன் பிறகுகேஜிஎஃப்பை எப்டி கொண்டு சென்றான் , அதை கைப்பற்ற நினைத்த மற்ற நபர்களுக்கும் மற்றும் ராக்கியின்செயல்பாட்டால் அரசாங்கம் என்ன செய்தது அவர்களை ஜெயித்தானா என்பதே இப்படத்தின் கதை.
இப்படத்தின் முதல் பாகத்தை இந்தியாவே கொண்டாடியது காரணம் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமேபார்த்த மேக்கிங் இதில் வசப்பட்டிருந்தது அதில் ஒரு ஹீரோவுக்கான மாஸ் அழகாக பொருந்தியிருந்தது.
மீண்டும் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அசாத்தியம் அதைசாத்தியபடுத்தி அசரவைத்திருக்கின்றனர்.
ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி ரசிகனுக்கு தர வேண்டும், செண்டிமெண்டைகதையில் கலக்க வேண்டும் என அனைத்திற்கும் பாடமெடுத்திருக்கிறார் பிரசாந்த் நீல்.
படத்திற்கு மிக பெரிய பலம் மேக்கிங் மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு, தமிழிலும் அதிரும் வசனங்கள் மற்றும் பின்ணனி இசை. இவையனைத்தும் இணைந்து நம்மை ஒரு அசாதாரண அனுபவத்தை தருகிறது. நடிகர் யாஷ்ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அருமை மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். அவர் பஞ்ச் பேசும் இடங்கள் பொறிபறக்கிறது.
யாஷ் தவிர சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் என அனைவருக்கும் மனதில் நிற்கும் அழுத்தமானபாத்திரங்கள். சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
முதல் பாகத்தில் இருந்த லைட்டிங் மற்றும் VFX இந்தபடத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்சன்காட்சிகள் எல்லாம் தரம். ஒரு ஹாலிவுட் ஆக்சன் படம் பார்த்த திருப்தியை தருகிறது படம்.
படம் முழுக்க வரும் ஸ்லோமோஷன் காட்சிகள் இடைவேளைக்கு பிறகு வரும் கொஞ்சம் இழுவை காட்சிகள்தவிர்த்து பார்த்தால் ஒரு நல்ல மசாலா படத்திற்கு முன்னுதாரணமாகி வந்து நிற்கிறது கேஜிஎஃப் 2