டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

நாளைய முதல்வராக ஆசைப்படும் நடிகரின் அப்பா & டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் 82ஆவது பிறந்தநாள் இன்று 💐 ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஏபி நாகரஜன்,பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த டைரக்டர்கள் வரை எத்தனை எத்தனையோ விதங்களில் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது இந்தியாவில் ஹாட் டாபிக் ஆகி இருக்கும் சட்டப் பிரச்சினைகளை அலசி, கூறுப் போட்டு நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்து வாயை பிளக்க வைத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர். கோலிவுட் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான்…
Read More
விஜய் நடித்து வரும்  ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப் படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். அண்மையில் பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ…
Read More
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

சக பத்திரிகை நண்பர்  ஒருவர் குறிப்பிட்டது போல், ‘எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி... இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு... இவைதாம் 82 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையா ளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர்’ இந்த ‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடுக்கும் பொதுநல வழக்குகள் அவருக்கு ஊடக ஆதரவைத் தேடிக்கொடுத்தன. அவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அநேகமாக அனைத்து தமிழ்…
Read More
விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

நம்ம கோலிவுட்டில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாகக் எகிறிக்கொண்டே போகும் டாப் ஹீரோ அஜித். எந்த ஒரு நடிகருமே தங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்ததாக சரித்திரமில்லை, ஆனால் திடீரென்று "நான் எனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன். முதலில் குடும்பத்தை கவனியுங்கள்" என்று கூறிய பிறகு இவரின் ஃபேன்ஸ் கூட்டம் முன்னிலும் பல மடங்கு எகிறி விட்டதாம். இந்நிலையில் நம் தமிழின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டாடும்விதமாய் அவர்களின் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் பிறந்த நாளின் போதும் கட் அவுட், போஸ்டர், ரத்த தானம் என்று செய்து  வருகின்றனர். அதையும் தாண்டி ஒரு சிலருக்கு  ரசிகர்கள் சிலை வடித்து வரும் போக்கும் ஆரம்பித்து விட்டது. அந்த வகையில்  விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை எடுத்திருந்தனர். இதையடுத்து தர்போது கும்பகோணத்தைச் சார்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்துக்கு சிலை எடுத்து வருகின்றனர். அஜித்-தின் ‘விவேகம்’ படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று…
Read More
விஜய் அய்யாவை நேரில் சந்தித்து நன்றி சொல்லணும் – அய்யாகண்ணு விருப்பம்

விஜய் அய்யாவை நேரில் சந்தித்து நன்றி சொல்லணும் – அய்யாகண்ணு விருப்பம்

சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணையதளத்தின் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் விஜய். அப்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துப் பேசினார். தன்னுடைய பேச்சில், "அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்" என்று பேசினார் விஜய். முன்னணி நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகளுக்காக தொடர் போராட்டங்க ளை நடத்தியவர் அய்யாக்கண்ணு என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு நன்றி தெரிவித்து அய்யாக்கண்ணு பேசிய போது, “வல்லரசாக ஆவதை விட விவசாயிக்கு நல்லரசாக வேண்டும் என்று விஜய் ஐயா சொன்னது எங்களது வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது. நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.…
Read More