ஹிப்ஹாப் தமிழாவின்  ‘நான் ஒரு ஏலியன்’

ஹிப்ஹாப் தமிழாவின் ‘நான் ஒரு ஏலியன்’

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்.
Read More
‘சூரரைப் போற்று’ பட பாடலின் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

‘சூரரைப் போற்று’ பட பாடலின் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள். இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொது முடக்கக் காலம் இன்றைய தினமான ஜூலை 23-ம் தேதியோடு 115-வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்கவும் அனாதைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்த நாள் இன்று ஜூலை 23-ல் வந்ததையொட்டி தங்களது தொண்டின் மூலமும், சேவை மூலமும் இந்தப் பிறந்த நாளை அசத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று சென்னையில் உள்ள 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார்கள். சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' படம் எப்போது…
Read More
இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்? இதோ கேளுங்க!

இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்? இதோ கேளுங்க!

மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். இவர் வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். “நீயே பிரபஞ்சம்” இந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் பேசும் போது, “இது என் குழு படைப்பு. இந்தப்பாடல் எதைச் சார்ந்தது என்றால், வெகுநாட்களாகவே இயற்கையை மனிதர்களாகிய நாம் இழிவு செய்து கொண்டே இருக்கிறோம்; சேதப்படுத்தி கொண்டே இருக்கிறோம்;எல்லாமும் நமக்கு வழங்கிய இயற்கையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதிராகவும் இருக்கிறோம். இறைவன் இயற்கை யையும் உயிரினங்களையும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய்கிறான், கொலை…
Read More
பலரையும் கவர்ந்த ஓ மை கடவுளே கதைப்போமா பாட்டு ஹிட் & அவுட்!

பலரையும் கவர்ந்த ஓ மை கடவுளே கதைப்போமா பாட்டு ஹிட் & அவுட்!

கல்யாணத்துக்கு அப்புறம் பிரெண்ட்ஸ கரெக்ட்டான டைம்க்கு மீட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு கல்யாணம் ஆனவங்களுக்குத் தான் தெரியும்… நாலைஞ்சு வருசம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனத்துக்கு அப்புறம் பர்ஸ் நைட்க்கு ஒத்துக்கற லவ் மேரேஜ் எங்க… யாருனே தெரியாம ஒரே நாள்ல கல்யாணம் பண்ணி அந்த நாளே பர்ஸ்ட் நைட்க்கு ஒத்துக்குற அரேன்ஜ் மேரேஜ் எங்க… அரேன்ஜ் மேரேஜ் தான் கெத்து! நம்மள விட ரெண்டு வயசு பெரிய பொண்ணு குறிப்பா அழகா இருக்கற பொண்ணு நமக்கு அக்காவ தான் இருக்கனும்னு அவசியம் இல்ல… லவ்ல லாஜிக்லாம் இல்ல அது ஒரு மேஜிக்… அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்குறவங்க தான் நிறைய அதிகம்… அவசரப்பட்டு கல்யாணம் பண்ணதால நிறைய பேரு டைவர்ஸே வாங்குறாங்க… நம்ம ஆளுங்க பிரச்சினையா இதுதான்… யெஸ் சொல்ல வேண்டியதுக்கு நோ சொல்வாங்க… நோ சொல்ல வேண்டியதுக்கு யெஸ் சொல்லி அப்புறம் வாழ்க்க பூரா கஷ்டப்படுவாங்க… மனுசன் நிம்மதியா உட்கார்ற…
Read More