த்ரிஷாவின் ‘மோகினி’ படத்தின் இசை உரிமையை வாங்கியது திங்க் மியூசிக்!

த்ரிஷாவின் ‘மோகினி’ படத்தின் இசை உரிமையை வாங்கியது திங்க் மியூசிக்!

த்ரிஷாவின் ஹாரர் படமான ‘மோகினி’ படத்தின் இசை உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் ‘மோகினி’. ஹாரர் படமான இதில், ஜாக்கி பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ‘மோகினி’ படத்தின் டிரெய்லர் வருகிற 21ஆம் தேதியும், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இசை வெளியீடு ஜனவரி 12ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. ‘மோகினி’ படத்தின் இசையை, பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. View image on Twitter Thi த்ரிஷா நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான ஹாரர் படமான ‘நாயகி’, அவ்வளவாகப் போகவில்லை. அதன்பிறகு தனுஷ் ஜோடியாக நடித்த ‘கொடி’ படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, ஒரு வெற்றிக்காகக் காத்திருக்கிறார் த்ரிஷா. கடந்த…
Read More
நபிகள் நாயகத்தின் பொன்மொழியை கதையாகக் கொண்ட ‘அனிருத்’!

நபிகள் நாயகத்தின் பொன்மொழியை கதையாகக் கொண்ட ‘அனிருத்’!

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு - A.R.K.ராஜராஜா படம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது.. “தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை ! என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை. முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்துகிறோம். யுவகிருஷ்ணா ( இவர் வண்ணத்திரை வார…
Read More
. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை! – பிரியதர்ஷன் ஓப்பன் டாக்!

. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை! – பிரியதர்ஷன் ஓப்பன் டாக்!

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமித்திருக்கிறார்கள். இதுவரை நான் 4 படங்கள் தயாரித்திருக்கிறேன். எல்லாமே  மலையாள படங்கள். முதன் முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கும் படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய  பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். நிமிர் படமும் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. என்னுடைய கேரியரில் நிமிர் மிக முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னை விட அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், நடிகர்களுடன் வேலை செய்தது என் பாக்கியம்…
Read More
15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு – பிரபு தேவா!

15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு – பிரபு தேவா!

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று(சனிக்கிழமை) முதல் தொடங்கியது. அதில் பிரவுதேவா - பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும்,…
Read More
ஜெயம் ரவியின் நெக்ஸ்ட் மூவி – ;அடங்க மறு’

ஜெயம் ரவியின் நெக்ஸ்ட் மூவி – ;அடங்க மறு’

உலக அளவில்  மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ்  தொலைக்காட்சி தொடர்கள்  தயாரிப்பில் ஈடுபட்ட  பிரபல நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ' தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள  நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தை,  சரண், மிஸ்கின் மற்றும் அமீருடன் போன்ற இயக்குனர்களிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள கார்த்திக் தங்கவேல்  இயக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'அடங்க மறு ' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து, '' ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் '' நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார் பேசுகையில்,…
Read More
வியக்க வைப்பார் விஷால்!- இரும்புத்திரை நாயகன் குறித்து இயக்குநர்!

வியக்க வைப்பார் விஷால்!- இரும்புத்திரை நாயகன் குறித்து இயக்குநர்!

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான் அவரிடம்…
Read More
‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

  மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசி, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். படத்தில் வரும் ஸ்லம் ஏரியா அதாவது குடிசைப் பகுதி உண்மையானது அல்ல. அது படத்திற்காக போடப்பட்ட செட். 7.5 ஏக்கர் வெற்று நிலத்தை தேர்வு செய்து குடிசைப் பகுதி போன்று செட் போட்டுள்ளனர். இந்த செட்டை போட 55 நாட்கள் ஆகியுள்ளது.  பார்த்தால் செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா செலவை பார்க்காமல் இவ்வளவு பெரிய செட் போட அனுமதி அளித்தாராம். வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு நிச்சயம் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான்  ‘வேலைக்காரன்’ படத்தின் அரங்கு உருவாக்க வீடியோ டிசம்பர் 10 அன்று யூடியூப்பில் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, “சினிமாவில் கலை இயக்கம் என்பது மிக முக்கியமான துறை. திரைக்கதையில் கதை…
Read More
புது ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் நடிக்கும் ‘செயல்’ கதை இதுதான்!

புது ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் நடிக்கும் ‘செயல்’ கதை இதுதான்!

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “ . ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                     ஒளிப்பதிவு  -   V.இளையராஜா  இசை   - சித்தார்த்விபின்   எடிட்டிங்   -  R.நிர்மல்                                                         பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில்  ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன்                                                                                          நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி  கலை  -  ஜான் பிரிட்டோ   தயாரிப்பு நிர்வாகம்  -  A.P.ரவி                                                                  தயாரிப்பு  -  C.R.ராஜன்                                                                                                                       கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.                                                           படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..                                                                                                           வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு…
Read More
சினிமா பி ஆர் ஓ-க்கள் இணைந்து நடத்தப் போகும் முப்பெரும் விழா!

சினிமா பி ஆர் ஓ-க்கள் இணைந்து நடத்தப் போகும் முப்பெரும் விழா!

ஒரு சின்ன பிளாஷ்பேக்.. 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்  .ஒரு தகவல் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆர் எம் வீ அலுவலகம் போன போது அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. அந்நாளில் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம் அந்த விஷயம் தெரிந்த நிலையிலும்  நான் ”ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன்.  உடனே “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும்   அந்த ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன.  இதைக் கண்ட எம்.ஜி.ஆர். வாய் விட்டு பாராட்டினார். தற்போது தமிழ் சினிமாவில்  தனி ஆவர்த்தனம் செய்யும்   P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு…
Read More
ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறி தேசிய விருது வாங்க முயலும் ’பள்ளிப் பருவத்திலே’

ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறி தேசிய விருது வாங்க முயலும் ’பள்ளிப் பருவத்திலே’

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு ‘பள்ளிப்பருவத்திலே’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா, கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க, ஆரம்பக்காலத்துல இருந்து. மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன் தான் அதிகம் இருந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப்…
Read More