‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது,…
Read More
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார் !!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார் !!

  இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, 'த்ரிபின்னா' ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 'த்ரிபின்னா' ஆல்பம், ஸ்வரங்களை வரிசையாக மட்டும் இசைக்காமல், அவற்றை பிரித்து பின்னர் ஒன்றாக இணைக்கும் ஒரு…
Read More
நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!

நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது. விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும்…
Read More
சன் நெக்ஸ்டில் வெளியாகியிருக்கும், “உன் பார்வையில்” திரைப்படம் எப்படி இருக்கிறது ?

சன் நெக்ஸ்டில் வெளியாகியிருக்கும், “உன் பார்வையில்” திரைப்படம் எப்படி இருக்கிறது ?

  Lovely World Entertainment தயாரிப்பில், தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது “உன் பார்வையில்” திரைப்படம். நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார். நடிகர் வெங்கட் ராமன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன்நெக்ஸ்ட் தளத்தில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. சரி வாருங்கள் படம் எப்படி என்று பார்க்கலாம். கண் பார்வையற்ற நாயகி, திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் தற்கொலை மரணத்திற்கு உண்மையான காரணம் யார் என தேட ஆரம்பிக்கிறாள். ஆனால் அந்த தேடலில் நிறைய மர்மங்கள் வெளி வர ஆரம்பிக்கிறது. அவளை ஒருவன் பின் தொடர ஆரம்பிக்கிறான். அவளின் தங்கையை கொலை செய்தது யார்? அவளை பின் தொடர்ந்தவன் யார்? என்பதே இப்படத்தின் கதை. 2010ல் வெளியான Julia’s Eyes எனும் ஸ்பானிஷ் படத்தை மையமாக வைத்து, இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.…
Read More
சிறை அரசு இயந்திரத்தின் கோரத்தை பேசும் படம் !!

சிறை அரசு இயந்திரத்தின் கோரத்தை பேசும் படம் !!

இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம் இசை: ஜஸ்டின் பிரபாகரன் தொகுப்பு (எடிட்டிங்): பிலோமின் ராஜ் கதை: தமிழ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சிறை. படத்தில் விக்ரம் பிரபுவுடன், எல்.கே. அக்‌ஷய் குமார், அனீஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். டாணாக்காரன் தமிழ் கதையை எழுதியுள்ளார். படம் எப்படி இருக்கிறது ? இந்த வருடத்தில் கட்டங்கடைசியாக வந்திருக்கும் ஒரு நல்ல படம். குற்றம் சாட்டப்பட்டு, கோர்டுக்கு கேஸே வராமல், இந்தியா முழுக்க ஏகப்பட்ட கைதிகள், தான் செய்த குற்றத்திற்கான தண்டனைக்காலம் தாண்டியும் சிறையில் இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் முஸ்லீமாக இருந்தால் அது தரும் சிக்கல்கள் இன்னும் அதிகம். அப்படி ஒரு அப்பாவியை வாய்தாவுக்கு, விக்ரம் பிரபு அழைத்துப் போகும்போது, நடைபெறும் சம்பவங்கள் தான் இந்தப்படம். தெளிவாக எழுதி, அதை அதே…
Read More
கென் கருணாஸ் இயக்கி,  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !!

கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !!

தேசிய விருதினை வென்ற 'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா- தாஜ்மோலா - கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் - உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ''இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில்…
Read More

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம் !!

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், 'கன்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார், ஆக்‌ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மற்றொரு…
Read More

வெற்றி நம் கையில் இல்லை – நடிகர் விக்ரம் பிரபு !!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது திரைப்பயணத்தில் 25 வது திரைப்படம் எனும் மைல்கல்லை “சிறை” படம் மூலம் தொட்டிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது “சிறை” திரைப்படம். டாணாக்காரன்  இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனது 25 வது திரைப்பட எட்டியுள்ள நிலையில், தனது திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் பிரபு பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். தனது திரைப்பயணம் குறித்தும், “சிறை” படம் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து…
Read More

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலியின் ஃபிலிம் செட் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளார்!

சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல். உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர். கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது. காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப்…
Read More

“சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” வெளியிடப்பட்டது !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி" பாடல் இன்று VIT கல்லூரியில் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்பட பாடல் வெளியிட்டப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை இளங்காற்றல் வருடும் இந்த " மின்னு வட்டம் பூச்சி" பாடலை கேட்டவுடன் நம்மை…
Read More