பொய் சொல்லி மாட்டிக்கொண்ட இளவரசு !!

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட இளவரசு !!

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு புகார் அளித்தது. இந்தப் புகார் தொடர்பா விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லி போன 2022 ஆம் வருடம் மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாசத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்க முடியவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

இயக்கம் - விஷால் வெங்கட் நடிகர்கள் - நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா, பிரவீன் சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில் வந்திருக்கும் ஒரு அருமையான சினிமா அனுபவம். ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை. நால்வர் வாழ்க்கை ஒரு ஹைபர் லிங் கதை போல ஆரம்பித்து அந்த உணர்வுபூர்வமான பயணத்தில் நம்மையும் இழுத்து சென்று நமக்குள்ளும் சில மாற்றங்களை அழுத்தமாய் விதைத்திருக்கிறார்கள். அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். கல்யாணம் வைத்துவிட்டு அதன் பரபரப்பில் இயங்கி கொண்டிருப்பவன், நல்லமனம் இருந்தாலும், எப்போதும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்துகொண்டிருப்பவன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பவன். மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன், சொல்லும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு,…
Read More
நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

இயக்கம் - கிஷோர் ராஜசேகர் நடிகர்கள் - சதீஷ், பவித்ரா லட்சுமி கதை - ஐடி இளைஞன் ஒருவனை நாய் கடிக்க அவனது டிஎன்ஏ நாய்க்கும், நாயின் டிஎன்ஏ அவனுக்கும் மாற அவனுக்கு நாயின் குணம் வருகிறது அதனால் வரும் பிரச்சனைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் எப்படி அதிலிருந்து வெளிவருகிறான் என்பதே கதை. ஐடியில் வேலையை விட்டு எப்போது தூக்குவார்கள் என கலக்கத்துடன் வேலை பார்த்து வருகிறார் சதீஷ். எல்லொரிடமும் எரிந்து விழுபவர் ஆபிஸில் பவித் ரா லட்சுமியை காதலிக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. நாய் கடித்த நொடியில் நாயின் டிஎன்ஏ அவருக்குள் பரவி நாயின் குணாதிசயங்கள் சதிஷுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மாற்று மருந்து தயாரான…
Read More