30
Jan
தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு புகார் அளித்தது. இந்தப் புகார் தொடர்பா விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லி போன 2022 ஆம் வருடம் மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாசத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்க முடியவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி…