பொய் சொல்லி மாட்டிக்கொண்ட இளவரசு !!

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு புகார் அளித்தது.
இந்தப் புகார் தொடர்பா விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லி போன 2022 ஆம் வருடம் மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாசத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்க முடியவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிச்சதா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுச்சு. வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுவிட்டதாவும் டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி கேமரா காட்சிளும் சமர்பிக்கப்பட்டன.

ஆனா, இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வக்கீல், டிசம்பர் 13 ஆம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் எனவும் டிசம்பர் 12ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தாகவும், காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தும் போலியானவை எனத் தெரிவிச்சார்.

குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்யுமாறு காவல்துறைத்து நீதிபதி உத்தரவு பிறப்பிச்சிருந்தார்.

இந்த வழக்கு இன்னிக்கு (ஜன.29) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில், மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சிடிஆர் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசு தரப்பில், 12 ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் போகலை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுச்சு.

ஆனாலும் காவல் துறை சமர்ப்பிச்ச விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவிச்சார். அத்துடன், 12ஆம் தேதி போலீஸ் ஸ்டேசனில் ஆஜரானதை கூறி, மன்னிப்பு கோரினால், அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி , அப்படி இல்லாவிட்டால் விளைவுகளை சட்டப்படி சந்திக்க வேண்டும் என எச்சரிச்சார், காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக நடிகர் இளவரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைச்சிருக்