மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யா

மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யா

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம். சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் திரு. சிவகுமார் வழங்கினார். தமிழ் திரையுலகில் 'ஜெய் பீம்' போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன…
Read More
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல்…
Read More
தமிழ் சினிமாவின் பொன் மகுடம்  ஜெய்பீம் !

தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய்பீம் !

இயக்கம் - த.செ.ஞானவேல் நடிகர்கள் - சூர்யா, மணிகண்டன், லியோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் கதை - மனிதனின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும், கள்ளர் இனக்குழுவில் ஒரு சிலரை, ஒரு கொள்ளைவழக்கில் போலீஸ் தவறுதலாக கைது செய்து போகிறது.  அவர்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி குற்றத்தைஒப்புக்கொள்ள சொல்கிறது. அதில் அவர்கள் தப்பி விட்டதாக அவர்களின் குடும்பத்திடம் சொல்ல, கணவனைகாணாத மனைவி, தன் கணவனை மீட்டு கொடுக்க சொல்லி வக்கீல் சந்த்ருவை அணுகுகிறார். அவர்களைநீதிமன்றம் மூலம் கண்டுபிடிக்கிறாரார சந்த்ரு என்பது தான் கதை. தமிழ் சினிமாவுக்கு மிக நீண்ட காலம் கழித்து ஒரு அற்புதமான படைப்பாக பலரது மனதையும் கலங்கடிக்கும்படைப்பாக உருவாகி, வந்திருக்கிறது ஜெய் பீம். ஒரு இனக்குழு மொத்தமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை, அவர்களின் உரிமைகள்மறுக்கப்பட்டதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக  ஒருஅற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு மொத்த குழுவிற்கும் பூங்கொத்துக்கள். ஒரு படம் என்ன செய்ய வேண்டும்…
Read More
இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததேஇல்லை- சூர்யா

இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததேஇல்லை- சூர்யா

ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கேநாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான்ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக்கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார். 20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளார். ஜெய் பீம்' திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது, "24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லாதருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு.…
Read More
வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது. தங்களுக்கென…
Read More
தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்த திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தீபாவளிக்கு அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான, வன்முறை  காட்சிகள் படத்தில் இருக்கிறது. இது மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் படமாக இருக்கும் என படக்குழு நம்பிவருகீறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Read More
தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் - ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்…
Read More
தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை விவசாயி அன்பாக குழந்தை போல் வளர்க்கும் மாடுகள் திடீரென காணமல் போகிறது. அதனை தேடப்போக அது மீடியா, அரசியல் பிரச்சனை என மாறி, அந்த குக்கிராமமே தமிழ்நாட்டின் கவனத்திற்கு உள்ளாகிறது. இறுதியில் அந்த ஏழைக்கு மாடு கிடைத்ததா என்பதே கதை. ஒரு கிராமம், ஒரு ஏழை விவசாயி அவனது மாடு அதன் பின்னணியில் ஒரு அரசியலையும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் நையாண்டி வகையில் சாட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை. அமீர்கானின் peepli live, தமிழில் வந்த ‘காக்கா முட்டை’ போல வந்திருக்க வேண்டிய படம். ஆனால் எந்த ஓர் ஈர்ப்பும் இல்லாத திரைக்கதையாக மாறியதோடல்லாமல், அமெச்சூர்தனமான மேக்கிங்கில் பாதியில் கவிழ்ந்த கப்பலாகி…
Read More
“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” பட ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகி யிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. இவையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் அமேசான் வழங்கிவருகிறது.…
Read More
கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பட நாயகி ஷங்கர் மகள் அதிதி!

கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பட நாயகி ஷங்கர் மகள் அதிதி!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுகம் அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், திருமதி.ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்க்ரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன்,…
Read More