பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் ரா..ரா.. ராஜசேகர்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யார் ? இவர்கள்' என பெயரிட்டுள்ளார்கள். லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க 'ரா.. ரா.. ராஜசேகர்' படத்தை இயக்கினார் பாலாஜி சக்திவேல். அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார். 'யார்? இவர்கள்' என பெயரிடப்பட்டுள்ள படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, பாண்டியன்,…
Read More
தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னட, தெலுங்கு பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு. பிரம்மாண்டமான படங்கள் என்றால் அது பந்துலுவால் மட்டுமே முடியும் என்று அளவுக்கு, தான் தயாரித்து இயக்கிய படங்கள் அனைத்தையும் சிறந்த கருத்துச்செறிவும், கலையம்சமும் கொண்ட அரிய படைப்புகளாக அளித்தவர்.ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களாய் இன்றும் சொல்லப்படும் செசில் பி டெமிலியின் "டென் கமாண்ட்மென்ட்ஸ்' வில்லியம் வைலரின் "பென்ஹர்' போல் தமிழில் படங்கள் தயாரிக்கப்படவில்லையே என்ற குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்தவர் பி.ஆர். பந்துலு. பொதுவாக சினிமா இயக்குநர்கள் பலரும் தங்களுக்கு எந்தக் கதையில் சுலபமாக வெற்றி கொடுக்கிறதோ அது தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் சலிப்படையும் வகையில் அதிலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.ஒருவருக்குக் குடும்பக் கதைகளே கைகொடுக்கும், அடுத்தவர் கிராமியப் பாடல்களிலேயே திறமை காட்டுவார். மற்றவர் மசாலாப்படங்களிலேயே வெற்றிகளை குவிப்பார். இன்னொருவர் காதல் கதைகளில்தான் சோபிப்பார். இப்படி ஒருவழிப்பாதையிலேயே வெற்றி காண்பவர்கள் மற்ற புதிய…
Read More
வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து வரும் 30ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 2,300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர். கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது.” விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. ஆனாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார். அணி விவரம்: புது…
Read More
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்? – ’நான் யாரென்று சொல்’ விழாவில் விக்ரமன் கேள்வி!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு "நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். எடிட்டிங் : பிரேம் பாடல்கள் : இளையகம்பன் ஸ்டண்ட் : பம்மல் ரவி இசை : ஜான் பீட்டர் ஒளிப்பதிவு : பாஸ்கர் நடனம் : ரவிதேவ் தயாரிப்பு : R.மணிமேகலை எழுதி இயக்கி இருப்பவர் - A.M.பாஸ்கர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன் ".நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷ யங்களை பேச மாட்டேன்.ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும்  இழப்பு. ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும்…
Read More
பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும்  “படைவீரன்”

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்".பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் "கல்லூரி" அகில்,  கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, இயக்குநர் விஜய்பாலாஜி,  நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, "பிச்சைக்காரன்" சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள "படைவீரன்" படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிட்டுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - மதிவாணன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனா இசை…
Read More