விஜய் தேவரகொண்டா  & பூரி ஜெகன்நாத், இணையும் படத்திற்கு LIGER என தலைப்பு!

விஜய் தேவரகொண்டா & பூரி ஜெகன்நாத், இணையும் படத்திற்கு LIGER என தலைப்பு!

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா பாலிவுட் உலகில் எதிர்பார்ப்புமிக்க இந்தியளவிலான பன்மொழி திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் எனும் பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை தந்த கமர்ஷியல் வெற்றி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இத்திரைப்படத்தை இயக்குகிறார். Puri connects நிறுவனத்துடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். இன்று படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். இப்படத்திற்கு “LIGER” Saala Crossbreed எனும் அடி தலைப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நீண்ட தலை முடியுடன், மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரருடைய தோற்றத்தில் கையில் கிளவ்ஸுடன் நிற்கிறார். பின்னணியில் சிங்கமும், புலியும் கலந்து நிற்கிறது. லைகர் Liger என்பது…
Read More
என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

வில்லன் பாத்திரம் பிடிக்கும் என்பதால் ஆதிரா ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே.ஜி.எஃப் 2'. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 2-ம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை இணைத்துள்ளார் பிரசாந்த் நீல். தற்போது யாஷுக்கு வில்லனாக நடித்திருப்பது குறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது: "ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் செய்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் இது. கதைப்படி ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். இந்த கதாபாத்திரமாக மாற உடல்தகுதியை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் சுமார் 1.5…
Read More
டார்லிங் பிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….!

டார்லிங் பிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….!

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம் மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது. தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்து விட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் "ஆம்! அது உண்மைதான்!! 'டார்லிங்' பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில்…
Read More
ராஜ மவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அப்டேட்!- வீடியோ

ராஜ மவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அப்டேட்!- வீடியோ

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' வெளியாகவுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இரவில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். எந்த அளவுக்கு குளிர் இருக்கிறது என்பதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. தற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு அறிவித்துள்ளது. இதில் 50 நாட்களும் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியதாகத் தெரிவித்துள்ளது படக்குழு. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவருமே…
Read More
ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நேற்று (08.11.20) தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண நிதிக்காகத் திரட்டிய தொகையை முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர். மேலும், தெலங்கானாவில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்ததற்கும் நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹைதராபாத் நகரில் 1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ''1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளம் உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளுடன் கூடிய உலகத் தரத்திலான திரைப்பட நகரம் ஒன்று ஹைதரபாத் புறநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட உள்ளது. அங்கு எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்டுடியோக்களை அமைக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு…
Read More
பிரபாஸ் & தீபிகா படுகோனேவுடன் இணைந்தார் அமிதாப்பச்சன்!

பிரபாஸ் & தீபிகா படுகோனேவுடன் இணைந்தார் அமிதாப்பச்சன்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனேவுடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கவிருக்கிறார். முன்னணி தென்னிந்திய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், இந்திய மொழிகளில் ஏராளமான மறக்க முடியாத படங்களை உருவாக்கியதுடன், தெலுங்கு சினிமாவின் மகிமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளது. அதன் சமீபத்திய படைப்பான, புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் கதையான, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற  ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு பிறகு, வரவிருக்கும் அடுத்த படம் வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிறுவனருமான அஸ்வினி தத்தின் கனவுப் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாகவும், இந்தியாவின் நாயகியான தீபிகா படுகோனே நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் இருக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் நடிக்கவிருக்கிறார் என்று இந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பல புகழ் பெற்ற திரைப்பட கலைஞர்கள் இணையவிருக்கும்…
Read More
சமந்தா – ஷர்வானந்த் இணைந்து நடிச்சிருக்கும் ‘ஜானு’ ட்ரைலர் ரிலீஸ்.

சமந்தா – ஷர்வானந்த் இணைந்து நடிச்சிருக்கும் ‘ஜானு’ ட்ரைலர் ரிலீஸ்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் லாஸ்ட் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96'. ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றிச்சு. குறிப்பாக 90's கிட்ஸ்க்கு இப்படம் ரொம்ப பிடிச்சிருந்தது. அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்' படப் புகழ் ஷர்வானந்த் நடிச்சிருக்கார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு' கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிச்சிருக்கார். இப்படத்துக்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா தெலுங்கு ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=8sWRT2hGPcQ&feature=youtu.be
Read More
தமிழில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜ மௌலியின் “விஜயன் “

தமிழில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜ மௌலியின் “விஜயன் “

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான " யமதொங்கா " எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன்  குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ் ,ரம்பா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.  கதை விஜயேந்திர பிரசாத் , மரகதமணி இசையமைத்திருந்தார் . கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இவர்கள் அனைவரும் நான் ஈ , பாகுபலி , பாகுபலி2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணி . பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான 'யமதொங்கா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் தற்போது  டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . ARK ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார் . இயக்குனர் எஸ்.எஸ் ராஜ மௌலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார் .5 படங்கள் ரீமேக்காகவும் , 2 படங்கள் மொழி…
Read More
தாதாசாகெப் பால்கே விருது வாங்கிய ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷி

தாதாசாகெப் பால்கே விருது வாங்கிய ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷி

தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ் சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஒரே வருடத்தில் மூன்று ஹிந்தி படங்களில் நடித்ததற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார். பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
Read More
ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா”!

ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா”!

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும்,  மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு  இப் படத்தை இயக்கி உள்ளார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி, ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கல கலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று  பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா"  உருவாகியுள்ளது.            தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன்  ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.இப்படத்தின் பாடல்…
Read More