ஸ்ரீலங்கா விசிட் இப்போதைக்கு ரத்து! -ரஜினிகாந்த் அறிவிப்பு

ஸ்ரீலங்கா விசிட் இப்போதைக்கு ரத்து! -ரஜினிகாந்த் அறிவிப்பு

இலங்கை, யாழ்ப்பாணத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை தமிழ் மக்களுக்கு 150 வீடுகள் லைகா நிறுவனம் சார்பில் கட்டித்தர திட்டமிட்டிருந்தது. வீடு வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்தமிழ் மக்களுக்கான வீட்டு சாவியினை அவர்கள் கையால் கொடுக்கும் படி விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் இவ்விழா ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்திடம் அவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் சூப்பர் ஸ்டார் அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று இப்பயணத்தை ரத்து செய்து கொண்டார். இதை அவர் அதிகார பூர்வாமாக தன் கடிதத்தின் மூலம் இன்று தெரிவித்தார்.    
Read More
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதாநாயகி மகிமா நம்பியார் நர்ஸாக  நடிக்கிறார்!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதாநாயகி மகிமா நம்பியார் நர்ஸாக நடிக்கிறார்!

தரமான கதையம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதன் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் தன்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர் அருள்நிதி. இவர் தற்போது அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க இருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடிக்க இருக்கிறார். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் இந்த  க்ரைம் கதையின் கதாநாயகியாக தற்போது மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்ய பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் என திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.  "நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு உன்னதமான கலைஞர் அருள்நிதி சார். எனவே ஏறக்குறைய அதே குணங்கள் நிறைந்த ஒருவரை தான் எங்கள் படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி, நாங்கள் மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்…
Read More
பக்கா  கமர்ஷியலான பேய்படம் – ‘டோரா’

பக்கா கமர்ஷியலான பேய்படம் – ‘டோரா’

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வலனாகியுள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மீண்டும் கோரிக்கை வைத்தபின்னர் 'டோரா' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் 'டோரா' ஆகும். விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “இது பக்கா கமர்ஷியலான பேய்ப்படம்தான். வாராவாரம் வந்துட்டு இருந்த பேய்ப்படங்கள் எப்போ குறைஞ்சதோ அப்போ தான், நான் இந்த பேய்ப்படத்தை ஸ்டார்ட் பண்னேன். மத்த பேய்ப்படங்களில் மக்கள் பார்க்காத விஷயங்களை இந்த படத்தில் காட்டணும்னு…
Read More
என்னை நிஜப் போலீஸூன்னு நினைச்சாங்க !- ராஜா ரங்குஸ்கி ஷிரிஷ் ஹேப்பி

என்னை நிஜப் போலீஸூன்னு நினைச்சாங்க !- ராஜா ரங்குஸ்கி ஷிரிஷ் ஹேப்பி

"மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்" என்று கூறுகிறார் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் கதாநாயகன் ஷிரிஷ் 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும் போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய…
Read More
”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். இப்படம் குறித்து சிம்புவிடம் கேட்ட போது, “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம். இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங் களில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும்,…
Read More
போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

தமிழில் ஒரு குறும்படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார்.  இக் குறும்படம்பார்பிக்யூ நேஷன் அனுசரனையுடன்  காமன் மேன் மீடியா  வழங்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது.வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு சுற்றுலாப் பயணி சந்திக்கும் நல்ல, கெட்ட அனுபவங்கள்தான்கதையின் அடிப்படை . இங்கு வரும் அவர்களுக்கு நேரும் கசப்பான அனுபவத்தின் மூலம் நம் இந்திய நாடு பாதுகாப்பற்ற நாடுஎன நினைக்கிற நிலை உள்ளது. ஆனால் சில இனிப்பான அனுபவங்களைக் காட்டி இந்தியாஅப்படிப்பட்ட தேசமல்ல என்று வெளிநாட்டினரை  உணர வைப்பது போலுள்ளது கதை. பிரதான பாத்திரமாக போலந்து நாட்டிலிருந்து மாமல்லபுரம் வருகிற சுற்றுலாப் பயணியாக டொமினிக்கா காமின்ஸ்கா  நடித்துள்ளார். இவர் போலந்துக்காரர் .வேறு துணை பாத்திரங்களும் வருகின்றன. கே.பி. செல்வா, காமன் மேன் சதிஷ், ரேக்ஸ், சண்முகம் , தேவ்காளிதாசன், சுபுசிவா, விஷ்ணு ஆனந்த்,விஜயன், சக்தி சரவணன், பார்த்தி, சத்யன் என இளைஞர்களின் கூட்டணியில் இக்குறும்படம்உருவாகியுள்ளது.  இக் குறும்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் திரு.…
Read More
எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இளையராஜா அனுப்பிய லாயர் நோட்டீஸ் கோலிவுட் ஷாக்’!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இளையராஜா அனுப்பிய லாயர் நோட்டீஸ் கோலிவுட் ஷாக்’!

கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி பதிவில் கூறியிருந்தது இதுதான் :🎯 ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி. சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த…
Read More
“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர். "ஒன் ஹார்ட்"…
Read More
பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல்  ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது.இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர் தாமரை. பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார். நீயும் நானும்... (மைனா) கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே... (உத்தமபுத்திரன்) குக்குறுகுக்குறு... (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா) யாரோ யாரோ... (மீகாமன்) தேகம்…
Read More
மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே…
Read More