விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் பேசும் போது, “ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும் .ஊடகங்கள் திரைப்படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் விமர்சனம் எழுதுவது உங்கள் வேலை, உங்கள் உரிமை…
Read More
‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம். 'பாகுபலி' கதையைத் தொடங்கும் போது…
Read More
பேய் இல்லாத திகில் படம் “உரு”

பேய் இல்லாத திகில் படம் “உரு”

வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது…
Read More
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார். சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது. ஜோக்கர் தமிழில்…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் ஹாலிவுட் டீம்!!

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் ஹாலிவுட் டீம்!!

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட  'THE PKF - PRAGUE PHILHARMONIA' இசை குழு, நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்' படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மிகவும்  பழமை வாய்ந்த இந்த PRAGUE PHILHARMONIA இசை குழு,  ஒவ்வொரு வருடமும் 250 க்கு ம் அதிகமான இசை பதிவுகளை நடத்தி, உலகின் மதிப்பிற்குரிய இசை குழுக்களில் ஒன்றாக திகழ்கின்றது. மேலும் 'பாரமௌன்ட்', 'சோனி', 'லூகாஸ் பிலிம்' போன்ற தலைச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்', 'ஹாரி பார்ட்டர்' மற்றும் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=YXMYS-pwU7Y தலை சிறந்த நடிகர் கமல் ஹாசனை போலவே விடா முயற்சியை பின்பற்றி வரும் ஜிப்ரான் தான், அவர் இசையமைத்து வரும்  அறம் படத்திற்கு இந்த இசை குழுவையை தேர்வு செய்தார். சமுதாயத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு…
Read More
சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் கமல்ஹாசன் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் மரணம் அடந்தார். அவரது மறைவுக்கான இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “என் நண்பர் கமல்ஹாசனுக்கு அவரை பெற்றவர் மற்றும் வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன் என்று மூன்று தகப்பனார்கள். சந்திரஹாசனை நான் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நண்பர் கமல்ஹாசன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்காதவர். இப்போது உள்ள நடிகர்களிடம் இருக்கும் பணம் கூட அவரிடம் கிடையாது. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதையும் மீறி கொஞ்சம் அவரிடம் பணம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், சந்திரஹாசன். இனிமேல் எப்படி கமல்ஹாசன் சம்பாதிக்கப்போகிறார். சம்பாதித்ததை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்றுதான் நான் இப்போது சிந்திக்கிறேன். கமல்ஹாசன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்தது…
Read More
ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “  – ஏப் 14ல் ரிலீஸ்!

ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “ – ஏப் 14ல் ரிலீஸ்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின்  The Show people   நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும்   படம் “ கடம்பன் “   ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   -  S.R.சதீஷ் குமார்    இசை   -  யுவன்சங்கர் ராஜா எடிட்டிங்   -  தேவ்  கலை   -  A.R.மோகன்  ஸ்டன்ட்  -  திலீப்சுப்ராயன் பாடல்கள்   -  யுகபாரதி  நடனம்   -  ராஜு சுந்தரம், ஷோபி இணைத் தயாரிப்பு   -  B.சுரேஷ் B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா தயாரிப்பு   -  ஆர்.பி.சௌத்ரி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராகவா படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் .... கடம்பன்  இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது.ஆர்யா  இப்படத்திற்காக தனது உடம்பை  வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.  இன்றைய…
Read More
‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கான படம்..!

‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கான படம்..!

அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்துவரும் இந்த  ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி(அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மதுசூதனன், கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.  “நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல்முறையாக கேட்டபொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் ‘அதி மேதாவிகள்’ படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம்” என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.  “பெற்றோர்களின் வற்புறுத்தலால்  இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல்  அரியர்ஸ் மேல்…
Read More
‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’!-

‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’!-

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’ ‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குனராய் பணியாற்றியவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ‘அன்னக்கிளி’,  ‘கிழக்கே போகும் ரயில்’,  ‘முதல் மரியாதை’,  ‘கடலோரக் கவிதைகள்’,  ‘உதயகீதம்’,  ‘சின்னக் கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும்,  பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம்,  எஸ்.பி.முத்துராமன்,  ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினேஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா,  இவன்ஸ்ரீ,  ஜெகதீஸ்,  ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங், இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ, படத்தொகுப்பு –சேவியர் திலக், பாடல்கள் – கலை சாய் அருண், கலை இயக்கம் – க்ராஃபோர்டு, சண்டை…
Read More
தென் திரையுலகின் வர்த்தக நாயகி ஸ்ருதி ஹாசன்!

தென் திரையுலகின் வர்த்தக நாயகி ஸ்ருதி ஹாசன்!

தெலுங்கில் தொடர்ந்து  6 வெற்றி படங்களையும், கடந்த  2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த ஸ்ருதி ஹாசன், தற்போது   தமிழிலும் - தெலுங்கிலும்  இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, வர்த்தக உலகின் நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் 'கட்டமராயுடு' திரைப்படம் மேலும் பெருமையை சேர்த்துள்ளது. இதை பற்றி திரையுலக  வர்த்தக துறையில் இருக்கும் நிபுணர்  ஒருவர் கூறுகையில், ""வர்த்தக உலகில் தனக்கென ஒரு வலுவான  அடையாளத்தை பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், கட்டமராயுடு படம் மூலம் தொடர்ந்து தெலுங்கில் ஆறு வெற்றி படங்களை  கொடுத்து இருக்கும்  கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் - தெலுங்கில் வெளியான 'சிங்கம் 3' திரைப்படம்…
Read More