ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

 ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த வரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித் துள்ளது. ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக படக்குழுவினரை தணிக்கை குழுவினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More
காதல் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 – என்ற டைட்டிலுடன் தயாராகும் படம்!

காதல் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 – என்ற டைட்டிலுடன் தயாராகும் படம்!

Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு " 143" என்று பெயரிட்டுள்ளார்.. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 .. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார்.நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு. : ராஜேஷ் ஜே.கே இசை. : விஜய் பாஸ்கர் பாடல்கள். : கபிலன் வைரமுத்து அறிவுமதி, சினேகன் கபிலன் கலை. : மணிமொழியன் ஸ்டண்ட். : தீப்பொறி நித்யா எடிட்டிங்.…
Read More
‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்:  லைகா  தகவல்

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: லைகா தகவல்

2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Follow Raju Mahalingam @rajumahalingam 2.0 promotion kick starts......#2point0 1:04 PM - 24 Jun 2017 அந்த வீடியோ பதிவில், '2.0' படத்தை விளம்பரப்படுத்த விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான 3டி தொழில்நுட்பத்திலான படம் என்பதால், கிராபிக்ஸ்…
Read More
தங்கரதம் பரமன் –  சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!

தங்கரதம் பரமன் – சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது. செளந்தரராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி. என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டு விட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல்…
Read More
பார்வையற்ற மாணவர்களின் ‘பறக்கும்’ ஆசை! நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி!

பார்வையற்ற மாணவர்களின் ‘பறக்கும்’ ஆசை! நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி!

பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் மைம் கோபி.  மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக் இதற்காக மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார். ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து நல்ல உணவு விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மைம் கோபி கூறுகையில், "போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூ ருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துசெல்கி றோம்..மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை. நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்" என்றார். சென்னை விமான நிலையத்தில் பார்வையற்ற மாணவர்களை…
Read More
சென்ற வார பாக்ஸ் ஆபீசியில் முதல் இடம் பிடித்த படம்  – புலி முருகன்!

சென்ற வார பாக்ஸ் ஆபீசியில் முதல் இடம் பிடித்த படம் – புலி முருகன்!

கடந்த வாரம் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியானது அதில் ஒரு சில படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் இடம்க் பிடித்தது அதில் முதல் இடத்தை பிடித்த படம் என்றால் அது கேரளா சூப்பர்ஸ்டார் முழுமையான நடிகர் என்று சொல்லப்படும் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றி படம் என்றால் அது புலி முருகன் என்று தான் சொல்லணும் இந்த படத்தை மீண்டும் ரீமேக் தமிழில் பண்ணவேண்டும் என்றால் அது சாத்தியம் கிடையாது எனவே இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தனர். இந்த டப்பிங் வேலையை யாரிடம் கொடுப்பது என்று யோசித்து பலரிடம் ஆலோசித்து கடைசியாக தேடிபிடித்த சிறந்த நபர் என்று கேள்விப்பட்டு இந்த வேலையை எழுத்தாளர் R.p.பாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த பொறுப்பை இயக்குனரும் எழுத்தாளர்மான R.P.பாலா ஏற்று கொண்டார் இந்த வேலையை செய்ய சம்மதித்தபோது இந்த படம் நல்ல வரவேண்டும் என்றால்…
Read More
விஜய் 61 – படத்தின் ஆடியோ; ரிலீஸ்  புதுத் தகவல்…!

விஜய் 61 – படத்தின் ஆடியோ; ரிலீஸ் புதுத் தகவல்…!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாது இதுதான் இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக 'விஜய் 61' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் திரைப்படத்தின் டைட்டிலையும் தேனாண்டால் ஸ்டுடியோஸ் லிமிடேட் நிறுவனம் அவரது பிறந்த நாளான ஜூன் 22க்கு முந்தைய நாளான ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் மிக பிரமாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இராம்நாராயணன் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் இது. 'விஜய் 61' மிகப்பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும்…
Read More
‘கட்டப்பா’ சத்யராஜ் மகள் மிரட்டல்!- போலீஸில் புகார்?

‘கட்டப்பா’ சத்யராஜ் மகள் மிரட்டல்!- போலீஸில் புகார்?

நடிகர் சத்யராஜ்  ஒரே மகள் திவ்யா நியூட்டிஷி யனிஸ்ட் (உணவு ஆலோசக மருத்துவர்) ஆக உள்ளார். இவரும் 'A Bit To Be Fit' என்ற டைட்டிலில் உருவான ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆவணப்படம் விளையாட்டு மற்றும் ஊட்ட ச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் இவரது கிளினிக்கிற்கு வந்த வெளிநாட்டினர் 2 பேர் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி திவ்யா கூறியதாவது: மூணு நாளைக்கு முன்னாடி இரண்டு ஆம்பளையும் ஒரு பெண்மணியும் வந்தாங்க. அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர். என் ஆலோசனை மையத்திற்கு வருகைத் தந்த மூவரும், தாங்கள் ஒரு மருந்து நிறுவனத்திலிருந்து வருவதாக சொன்னாங்க. உடனே அவர்களிடம் குறிக்கிட்டு ’நான் வைட்டமின், சத்து பானம், ஊடச்சத்துகான பண்டங்கள் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைப்பதாக தெரிவித்தேன். அதைப் பொருட்படுத்தாத அந்த அமெரிக்க மருந்து நிறுவன பிரதிநிதிர்கள், தாங்கள் கொண்டு…
Read More
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு 8 கெட் அப்!

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு 8 கெட் அப்!

ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதி வாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை யில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடர்ந்த காடுகளுக்கு முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு. காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுகள் வாழ்வ்து போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார். சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் விஜய் சேதுபதியின் ஒரேயொரு கெட்டப் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதில் 20 வயது இளைஞராக தாடி - மீசை இல்லாமல் நடிக்கவுள்ளதால், தற்போது…
Read More