விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து ஜூலை 21 அன்று வெளியாகவுள்ள  ஸ்பை த்ரில்லர் படம் ''கொலை''. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் , ரித்திகா சிங்க் மற்றும் மீனாக்ஷி சௌத்ரி போன்றவர்கள் முக்க்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்தப் படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்,சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில்  படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது, "இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி". கலைப்புலி…
Read More
மும்பையில் ஹிப்-ஹாப் கான்சர்ட் நடத்தவுள்ளார் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!

மும்பையில் ஹிப்-ஹாப் கான்சர்ட் நடத்தவுள்ளார் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் "Get Rich or Die Tryin" ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. நேரடி…
Read More
மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்!

மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்!

  தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியவர் கே. வி. ஆனந்த். இவர் முதலில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமா மீது ஏற்பட்ட காதலால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டார். அப்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கே.வி.ஆனந்த்தை அணுகியிருக்கிறார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல்வன், பாய்ஸ் பாங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவு செய்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தை இயக்கிய இயக்குநராக அறிமுகமானார். இவர் பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சினேகா மற்றும் சாதனா…
Read More
வசூல் சாதனை படைத்த போர் தொழில் திரைப்படத்தின் வெற்றி விழா! இத்தனை கோடியா!

வசூல் சாதனை படைத்த போர் தொழில் திரைப்படத்தின் வெற்றி விழா! இத்தனை கோடியா!

  அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு…
Read More
தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான்…
Read More
ஒட்டு மொத்த யூடியுப் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் இணைந்து நடத்திய “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இசை வெளியீட்டு விழா

ஒட்டு மொத்த யூடியுப் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் இணைந்து நடத்திய “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இசை வெளியீட்டு விழா

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர். பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ,இயக்குனர் லிங்குசாமி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய திரைப்பிரபலங்கள் இணைந்து படத்தில் நடித்திருந்த கதாநாயகர்களை அறிமுகம் செய்தனர். பெரும் ரசிகர் கூட்டத்தின்…
Read More
மம்முட்டி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ரங்கன் வாத்தியார் பசுபதி!

மம்முட்டி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ரங்கன் வாத்தியார் பசுபதி!

  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி' . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில்   நடிகை அம்மு அபிராமி பேசியதாவது, "இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான்…
Read More
“கட்டிஸ் கேங்”படக்குழுவினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்

“கட்டிஸ் கேங்”படக்குழுவினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்

தென் தமிழக படங்களில் அதிகம் பேசப்படும் குணச்சித்திர நடிகர் சௌந்தரராஜா ,  சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் . இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார். தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் (Oceanic movies) சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக…
Read More
தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுது. மேலும் ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துகிட்டிருக்குது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கயிருப்பதாக செய்திகள் வருகின்றன.படத்திற்கு படம் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. இதுஒருபக்கம் இருக்க தளபதி 68 படம் விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களின் மூலம் வெங்கட் பிரபு புதுமை படைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன .பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமானதாக இருக்கும். அதைப்போல இப்படம் வித்யாசமாக இருக்கும் என்றும், படத்தைப்போல படத்தின் ப்ரோமோஷன்களும் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும்…
Read More
எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் சர்வானந்த். 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தது இவர்தான். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தேதி பல மாதங்களாக அறிவிக்கப்படாததால் திருமணம் நின்றுவிட்டது என்று செய்தி பரவியது. அதை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தேதியை அறிவித்தனர். மேலும் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சர்வானந்த் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் விபத்தில் இருந்து காயம் அடையாமல் தப்பினார். இந்நிலையில் இன்று சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Read More