இயக்கம் – அபிஷன் ஜீவிந்த்
நடிகர்கள் – சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர் , கமலேஷ்
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – மில்லியன் டாலர் ஸ்டுடியோ – பசிலியன் நசீரத், மகேஷ் ராஜ் பசீலன்
சமீபத்தில் வந்த டீசர்களிலேயே அதிக பரபரப்பை கிளப்பியது இந்தப்பட டீசர் தான். அத்தனை எமோசன் நகைச்சுவை என எல்லாம் கலந்து அசத்தியிருந்தார்கள்
ஆனால் இந்தப்படத்திலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு முக்கியமில்லை.
டீசர் டிரெய்லர் பார்த்து நிறைய எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் முதலில் அதை மறந்து விடுங்கள்.
அந்தளவு படமில்லை… ஆனால் அதற்காக மோசமுமில்லை..
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக விடுகிறார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சகஜமான வாழ்க்கையை வாழலாம் என நினைத்தவர்களுக்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வர அதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்கா? இல்லையா? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை .
சசிகுமார் இதற்காகவே செய்து வைத்த கேரக்டர் போல் அப்படியே பொருந்திப் போகிறார்.
அயோத்தி படத்துக்குப் பிறகு இந்தக் கதையை சசிகுமார் தேர்வு செய்து நடித்த இடத்திலேயே பாராட்டுக்களை பெறுகிறார்.
சிம்ரனுக்கு இது ஃபுல் மீல் ரோல். ஈழத்துப்பெண், குடும்பத்தலைவி, அம்மா என பல முகங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
சசிகுமார், சிம்ரனை தாண்டி அவர்களின் மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் என இருவரது நடிப்பும் வேறலெவல். அதிலும், ஜோசப் குருவிலா என சொல்லி அதகளப்படுத்தும் சிறுவன் கமலேஷின் நடிப்பு தான் ஒட்டுமொத்த திரையரங்கையும் அடிக்கடி சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தை கடைசி வரை போரடிக்காமல் என்டர்டெயின் பண்ணிக் கொண்டே செல்கிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இன்னொரு ஹீரோவாகவே தனது முதல் பாடலில் இருந்தே கதையையும் கதையின் தன்மையையும் ரசிகர்களுக்குள் அழகாக கடத்தி விடுகிறார். பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார். ரமேஷ் திலக்கின் நடிப்பும் அப்ளாஸ் அள்ளுகிறது. அரவிந்த் விஸ்வநாதனின் அழகான ஒளிப்பதிவு மற்றும் பரத் விக்ரமின் எடிட்டிங்கும் கூடுதல் பலம்.
இயக்குநருக்கு முதல் படம் என சொல்ல முடியாத அளவு ரசிக்க வைத்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஐடியா, அதில் செண்டிமெண்ட் நகைச்சுவை தூவி, பக்கா விருந்து தந்துள்ளார்.
தீவிரமான கதையோ, காட்சிகளோ தொடர்ச்சியாக இல்லாமல் தனித்தனியாக இருக்கிறது. ஆனால் போரடிக்கவும் இல்லை.
ஒரு டிபிகல் மெலோடிராமா படம், பிழிய பிழிய செண்டி கிரிஞ்ச் காட்சிகளை, இறுதியில் நகைச்சுவை தூவி ரசிக்க வைத்து விடுகிறார்கள்.
விசு ஸ்டைல், ரதாமோகன் ஸ்டைல் சினிமா தான் இதுவும், ஆனால் அதில் முழுமையாக ஒரு உயிர் இருக்கும். இதில் அது மிஸ்ஸிங்.
இதை சொன்னால் திட்டுவார்கள், இது குட் பேட் அக்லி மாதிரி தான் இது முழுக்க ஃபர்ஸ்ட் புட் கலாச்சார சினிமா. இந்த டீசர் பார்த்தவர்கள் இதில் சிம்ரன் ஆள் தோட்ட பூபதி பாடலுக்கு ஆடுவார் என எதிர்பார்ப்பீர்களா ? ஆடியிருக்கிறார்.
ஆனாலும் இந்த மாதிரி லைட் ஹார்டட் சினிமா கண்டிப்பாக இங்கு வேண்டும்.
ராதாமோகன் ஸ்டைல் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம். பார்த்து விடுங்கள்.