நான் வேலைக்காரன் சிவகார்த்திகேயன் அப்பா!- சார்லி மகிழ்ச்சி!

எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள்தான் ஜீவனைத் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூர்வ மாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். ஆம்.  எந்த ஒரு கதா பாத்திரத்திலும் அசத்தும் நடிகர் சார்லி இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேலைக்காரன் படம் பற்றியும், தனது கதாபாத்திரம் பற்றியும் பேசிய நடிகர் சார்லி, ”கொஞ்ச சில பேரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர்தான் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும்  உறுதியாகியிருக்கிறது. தனது மிக  எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார்.

அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது. இந்தப் படத்தில்  எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும். இந்தப் படத்தில் மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

இயக்குநர் மோகன் ராஜா சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குநர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில் நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை ‘மிகப் பெரிய தொழில் வித்தகர்கள்’ என்றுதான் கூற வேண்டும்…” என்கிறார் நடிகர் சார்லி.