எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

 

இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் “ராஜா தேசிங்கு’ என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்.”ராஜா தேசிங்கு’ படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை

படித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்வாய்விட்டுச் சிரித்தார். அரச படமான “ராஜா தேசிங்தில்’ கலைவாணர்வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வசனம்என்ன இருக்கும் என்று தயாரிப்பாளர் யோசித்தார்.கவியரசரின் இந்த அழகானதமிழ் வசனத்தை என்.டி. ராமராவ்பேசினால் அலங்கோல மாகிவிடும். எஸ். எஸ். ஆர். நடித்தால்சிறப்பாக இருக்கும் என்று கலைவாணர் கூறினார். தயாரிப்பாளர்எஸ். எஸ். ஆரை அழைத்து . எம். ஜி.ஆரின் படைத் தளபதியும், நண்பனுமான மகமத்கான் வேடத்தில் நடிக்க சம்மதமா எனக்கேட்டார். எம்.ஜி. ஆருடன்நடிக்க யாருக்குத்தான் விருப்பம்இருக்காது. எஸ். எஸ். ஆர். உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.எம்.ஜி. ஆருடன்நடிக்க பலரும் போட்டிபோடும் அதே வேளைபானுமதியுடன்இணைந்து நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பப்படமாட்டார்.

எம்.ஜி.ஆர்., பானுமதி, எஸ். எஸ். ஆர்., பத்மினி என இருக்கட்டும் என்று எம்.ஜி.ஆர் யோசனை கூறினார்.படப்பிடிப்புத் தளத்துக்குவந்த பானுமதி தனது ஜோடி எஸ்.எஸ்.ஆர். என அறிந்ததும் சத்தம் போட்டார். காரணம் “ரங்கூன் ராதா’ என்றபடம் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரமது. அதில் கதாநாயகனாக நடிகர் திலகம் நடித்தார். நடிகர்திலகத்தின் ஜோடியாக பானுமதி நடித்தார். பானுமதியின் மகனாக எஸ். எஸ்.ஆர். நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதிதயாரித்த அப்படம் பெரு வெற்றிபெற்றது.”ரங்கூன்ராதா’ படத்தில் எனக்கு மகனாகநடித்த எஸ். எஸ். ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாதென பானுமதி மறுத்துவிட்டார். பானுமதியின் கோபத்தைப் பற்றி படஉலகம் நன்கு அறிந்திருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் அனைவரும்அவரை எதிர்த்து பேசத் தயங்குவார்கள்.எஸ். எஸ்.ஆருடன் ஜோடியாக நடிக்கமுடியாது என்று பானுமதி சத்தமாகப் பேசினார். நிலைமையை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். தயாரிப்பாளரிடம் சென்று எம்.ஜி.ஆரின் ஜோடியாக பானுமதி நடிக்கட்டும் என்றார்.

என்.எஸ்.கிருஷ்ணனுக்குஇப்பிரச்சினையைப் பற்றி தயாரிப்பாளர்அறிவித்தார். என். எஸ். கிருஷ்ணன் ஸ்டூடியோவுக்குச் சென்று எல்லோரையும் சமாதானம் செய்தார். அதன் பின்ன ர்படப்பிடிப்பு ஆரம்பமானது.

ரமணி