சுந்தர் சி அரண்மனை 4  அசத்தியதா?

சுந்தர் சி அரண்மனை 4 அசத்தியதா?

குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் திரைக்கு வந்திருக்கிறது. குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவு சிறப்பாக இருக்கிறதா ? இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, வி டிவி கணேஷ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்திருக்கிறது அரண்மனை 4.   சுந்தர் சி எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்ந்து போகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு அரண்மனை படம் எடுத்து ஜாலியாகி விடுவார். அவருக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதே ஜாலியை இந்த படம் கடத்தி வந்தது, அதனால் தான் இந்த படம் 3 பாகங்களை கடந்து நான்காவது பாகமாக வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு செய்து வைத்த சட்டை போல ஒரு ஹாரர் படத்தில் காமெடி கிளாமர் கமர்சியல் எல்லாவற்றையும் கலந்து ஒரு விருந்து சாப்பாடை தயாரித்து வைத்திருந்தார் சுந்தர் சி. அரண்மனை படங்கள் அனைத்துமே கதை ஒன்றாக தான் இருக்கும், ஒரு அரண்மனை அங்கிருக்கும்…
Read More
பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

அரண்மனை 3 இயக்கம் - சுந்தர் சி நடிப்பு - ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக். கதை - வழக்கம்போல் ஒரு அரண்மனை அங்கு ஒரு குடும்பம், சதியால் சாகடிக்கப்பட்டு பழிவாங்க துடிக்கும் பேய். அதிலிருந்து நல்லவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. அரண்மனை 1,2 பாகங்கள் பம்பர் ஹிட்டடிக்க, அந்த தைரியத்தில் மூன்றாம் பாகத்தை பெரும் பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எதை எடுத்தாலும் ரசிகர்கள் பார்பார்கள் என்கிற ஏளனம் திரைக்கதையில் தெரிவது சோகம். சுந்தர் சி படங்கள் எப்போதும் மக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்துவிடும். பேய் படமாகவே இருந்தாலும் படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையிலோ, காமெடி சுத்தமகா இல்லை, வெறும் நடிகர்கள் கோணங்கித்தனம் செய்து கொண்டு அங்காங்கே படம் முழுதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நமக்கு சிரிப்பு மட்டும் வரவே இல்லை. அரண்மனை படங்களில் காமெடியும் திரில்லும், சரிபாதையில் கலந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில்…
Read More
சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

சுவாரஷ்யங்களை உள்ளடக்கிய அரண்மனை 3 படபிடிப்பு!

மக்கள் ரசித்து கொண்டாடிய அரண்மனை 1 & 2 படங்களைவிட அரண்மனை 3 படம் வித்யாசமாகவும் மிகச் சிறப்பான கதை அம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அரண்மனை 3 ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கப் போவது உறுதியாகியுள்ளது. அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினந்தோறும் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்தி வைத்து பொதுமக்கள் பூஜை செய்து கலைந்து சென்ற பிறகே படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். அரண்மனை 3 படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு எதிர்பாராத அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்னும் ஊரில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் என்னும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை வேண்கனியர் பேலஸ். இந்த…
Read More