சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25-வது படமாகும். ‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மோத்வானியின் ஸ்டில்ஸுக்கு பொருத்தமாகவும் இவை அமைந்திருந்தன. அந்தப் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடையில் கஞ்சா புகைப்பதுபோல போஸ் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக…
Read More
ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” – ஷூட்டிங் ஓவர்!

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” – ஷூட்டிங் ஓவர்!

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்த்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும் போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது.... இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்தில் இருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு புறம் கொரோனா…
Read More