“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

  RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்கிறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி மேடம் அட்டகாசாமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃபிரண்ட் இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதை காண…
Read More
முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன்   மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி பற்றி  படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க  முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின்  அடிப்படையில்  உருவாக்கப்பட்டிருக்கும்…
Read More
90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”

90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”

90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும். ஆரம்பித்த 15 நிமிடங்களி லேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம். பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது 5 பாடல்கள்…
Read More
எஸ்.ஏ.சந்திரசேகரனின் பள்ளி பருவ ரியல் காதல் – ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்!

எஸ்.ஏ.சந்திரசேகரனின் பள்ளி பருவ ரியல் காதல் – ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் பள்ளி பருவத்திலே இசை வெளீயீடு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது....”பள்ளி பருவத்திலே படத்தின் பாடலை பார்த்தேன். பருவ சிட்டுகளின் அரும்பும் காதலை யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். படத்தின் நாயகன் நந்தன் ராம் - வெண்பா இருவரையும் பார்த்து கொண்டே இருக்கலாம் போலா இருக்கு. அவர்கள் பெரிய அழகா என்றால் அதுவல்ல , எல்லாரையும் வசப்படுத்தும் ஒரு ஈர்ப்பு உள்ளது. கண்டிப்பாக சிற்பியின் மகன் நந்தன் ராம் பெரிய நடிகராக வலம் வருவார். எனக்கும் பள்ளி பருவத்தில் காதல் வந்தது. அந்த காதல் சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . பரமக்குடியில், காமன்கோட்டை கிராமத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் போது தேவதையாக தெரிந்த அவளுக்கு காதல் கடிதம் எழுதினேன். அவளும் எனக்கு காதல் கடிதம் தந்தாள். காதல் கனிரசம் சொட்ட எங்கள் காதல் வளரும் போது எனது…
Read More