11
Mar
இயக்கம் - பாண்டிராஜ் நடிப்பு - சூர்யா, பிரியங்கா மோகன்,சத்யராஜ்,வினய் கருணை இல்லா மனித மிருகங்களால் சூரையாடப்படும் பெண்களை போராடி மீட்கும் நாயகனின் கதை தான் எதற்கும் துணிந்தவன், நன்றாக வாழும் இரண்டு கிராமங்களில் பெரிய மனிதன் போர்வையில் வலம் வரும் வினய் அவரது இச்சைக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, பல தவறூகளை செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அதை அறியும் நாயகன் சூர்யா, வில்லனை முறியடித்து அப்பாவிகளை எப்படி காக்கிறார் என்பது தான் கதை. ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சமூக நோக்கிலான படம் செய்ததில் கவர்கிறார் சூர்யா, ரசிகர்களுக்கு ஏற்ற மசாலா காமெடியும் கலந்து ஒரு குடும்ப படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு திரையில் வந்திருக்கும் படம் ரசிகர்களின் மொத்த ஏக்கததையும் போக்கும் வகையில் ஆடல் பாடல் ஆக்சன் காமெடி கருத்து எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பஞ்ச் வசனம் காமெடி…