வேலை இல்லா பட்டதாரி 2- ல் என்ன ஸ்பெஷல்?

வேலை இல்லா பட்டதாரி 2- ல் என்ன ஸ்பெஷல்?

ரகு, ரகு என சரண்யா பொன்வண்ணன் அழைத்துக்கொண்டிருந்த வரை, நமக்கே ரகுவரன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை. ‘என் முழுப் பேரு ரகுவரன்’ என தனுஷ் வில்லத்தனம் காட்டியதுதான் திருப்புமுனை. ரகுவரனுக்கு அப்பா என்றால் பயம். அம்மா மீது பாசம். தம்பி என்றால் அன்பு கலந்த வெறுப்பு என வி.ஐ.பி படத்தில் பார்த்துவிட்டு, வி.ஐ.பி-2 படத்தில் என்ன செய்திருப்பார்களோ என்ற பயம் ஏற்பட்டபோது, அதை சுக்குநூறாக உடைத்தது வி.ஐ.பி 2 டீசர். டீசரில் சமுத்திரக்கனிக்கு எதிரியே இல்லைன்னா வாழ்க்கையே போருடா என்ற வசனம் கொடுத்திருப்பார்கள். அதுதான் ரகுவரனின் தாரக மந்திரம். தனக்கு சமமான எதிரியை வைத்துக்கொண்டு வீழ்த்துவதைவிட, தன்னைவிட பல மடங்கு உயரத்தில் இருக்கும் எதிரியை அதற்கும் மேலே சென்று அடித்து வீழ்த்துவதுதான் வீரத்தின் அடையாளம். ஆனால், வி.ஐ.பி 2 படத்தில் அது வில்லனுக்கு(ரகுவரனுக்கு) அடையாளம். ரகுவரனின் எதிரியாக வரும் வசுந்தராவின் கேரக்டரை உச்சத்தில் வைத்ததிலேயே, ரகுவரனின் அடுத்த பாய்ச்சல் எத்தனைப் பெரியதாக இருக்கப்போகிறதென தெரிந்துகொள்ளலாம் . ஆனால்,…
Read More
விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்‌ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதன் சாராம்சம்:- “தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன். தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள்,…
Read More
வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் படத்தின் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தனுஷ், கஜோல், சமுத்திரகனியுடன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமன் உள்ளிட்ட பலரும்…
Read More