கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு  பர்த் டே!

கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு பர்த் டே!

ஒரு ஆக்டர் என்பவர், எல்லா விதத்திலும் நடிக்கோணும். அதாவது முகத்தால் நடிக்கோணும். கண்களால் நடிக்கோணும். கை அசைவுகளால் நடிக்கோணும். நடையிலும் ஓட்டத்திலும் நடிக்கொணும். இதைத்தான் ‘பாடி லாங்குவேஜ்’ என்று கொண்டாடுவாய்ங்க ரசிகர்களுங்க. மிகச் நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் சேஷ்டைகளும் கோணங்கித்தனங்களும் மட்டுமே நமக்குள் வெடிச்சிரிப்பைக் கொடுத்துவிடும். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்களில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து நினைத்து விகசிப்போம். கண்ணீர்விடுவோம். சார்லி சாப்ளின் நம்மைச் சிரிக்கவைத்தார். அவரின் வாழ்க்கையோ நமக்கு துயரத்தைக் கொடுத்தது. நம்மூரிலும் அப்படியொரு நடிகரைச் சொல்லலாம். நம்மவரும் ஓடுவார். தடக்கெனக் குதிப்பார். பரபரவென பாய்வார். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்வார். அவர் செய்வதெல்லாம் இருக்கட்டும். அந்தக் கண்களை வைத்துக்கொண்டு உருட்டினாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அப்பேர்பட்ட பண்பட்ட நடிகர்தான்... சந்திரபாபு. முத்து நகரம் என்று போற்றப்படுகிற தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. அவரின் தந்தை சுதந்திரப்…
Read More
தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமா இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சினிமா உலகம் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. அவர்களில் மிக முக்கியமானவர், தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர். அவர் இல்லையென்றால், இன்று ஒரியா அல்லது போஜ்புரி படங்களைப் போலத்தான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியும் இருந்திருக்கும்; அவர்தான் அதை மாற்றினார். செட்டியார்களின் கலை உணர்வும் தொழில் பக்தியும் பொதுவாக நகரத்தார் எனப்படும் செட்டியார்களின் இயல்பு அல்லது தர்மம் காலத்திற்கேற்ற தொழில்களை மேற்கொள்வதும், அதனை கலை உணர்வுடன் ரசிக்கும்படியாகச் செய்வதும்தான். செட்டியார்களின் பெருவாழ்வுக்குக் காரணம் தொழில்பக்தி என்றாலும், எல்லாவற்றையும் கலை உணர்வுடன் செய்வது அவர்களின் பெருமைக்கு முக்கியக் காரணம். அது வீடு, உணவு, நகை என்றல்லாமல், வழிபாட்டிலும் கோயில்களிலும் கூட ஒரு…
Read More
தனுஷ்: ‘விடலை’யில் இருந்து ‘உலக சூப்பர் ஸ்டார்’ வரை – ஓர் உழைப்பின் கதை!

தனுஷ்: ‘விடலை’யில் இருந்து ‘உலக சூப்பர் ஸ்டார்’ வரை – ஓர் உழைப்பின் கதை!

சினிமா ஒரு மாய உலகம். யார் எப்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. யார் என்றே தெரியாத ஒருவரை நூற்றாண்டின் நடிகராக மாற்றும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும், சில படங்களிலேயே ஒரு கலைஞனை ஒதுக்கி வைக்கவும் இந்த சினிமா தயங்காது. இந்த புரிதல் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த மாய உலகில் நுழைந்து, காணாமல் போய் உள்ளனர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றும் ஒருவனை கடைசிவரை கண்டுகொள்ளாது. அதுவே சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை தனக்குள்ளே இழுத்து, நீச்சல் அடிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுத்து, இந்த சினிமா கடலில் மாபெரும் மரியானாவாக மாற்றும். அப்படி மாறிய ஒருவர் தான் நடிகர் தனுஷ். மழித்த மீசை; பென்சில் தேகம்; அப்பாவி முகம்; விடலைப்பருவம்... இப்படியான உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை 19 வருடங்கள் கழித்து உலக சினிமாவே கொண்டாடப் போகிறது என்று…
Read More
லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் சின்னம் திறக்கப்பட்ட நாள்!

லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் சின்னம் திறக்கப்பட்ட நாள்!

1923 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, உலகத் திரைப்படத் துறையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அடையாளச் சின்னமான 'ஹாலிவுட்' (Hollywood) சின்னம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் மலைகளில் இருக்கும் லீ குன்றில் (Mount Lee) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. ஹாலிவுட் சின்னத்தின் ஆரம்பம் இந்தச் சின்னம் முதலில் "HOLLYWOODLAND" என்று அழைக்கப்பட்டது. இது ஹாலிவுட்லாண்ட் என்ற புதிய குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. ஹாரி சந்த்லர் (Harry Chandler) என்ற லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் வெளியீட்டாளர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்தார். ஒவ்வொரு எழுத்தும் சுமார் 30 அடி அகலமும், 50 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இந்த எழுத்துகள் தகரம், கம்பிகள் மற்றும் கம்பங்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டு, இரவில் ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டன. ஒரு பாதுகாவலர் ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. விளம்பரச் சின்னத்திலிருந்து…
Read More
வில்லாதி வில்லன் – எதிர்நாயகன் & நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த  நாளின்று!

வில்லாதி வில்லன் – எதிர்நாயகன் & நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த நாளின்று!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர். சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வந்தனர்.அப்படி நாடகத்திலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்தான் ஆர்.எஸ்.மனோகர். உண்மையில் இந்த சினிமா விசித்திரமானது. யாரை எங்கே எப்போது உயர்த்தும் என்பதும் அறியமுடியாது. யாரை எங்கே எப்போது தாழ்த்தும் என்றும் உணரமுடியாது. சிலர் சில வெற்றிகளை அதிர்ஷ்டம் என்பர். சிலர் அதீத திறமை என்பர். அதிர்ஷ்டமும் திறமையும் கலந்துகட்டி விளையாடும் இந்த வினோத விளையாட்டில் அடையாளம் அழிந்துபோன பல திறமைசாலிகள் உண்டு. இவருக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா என்று ஆச்சர்யப்படும் கதைகள் நிறைய உண்டு. அந்த…
Read More
எம்.ஜி.ஆரின் முதலாளி சின்னப்பா தேவர் பிறந்த நாளின்று!

எம்.ஜி.ஆரின் முதலாளி சின்னப்பா தேவர் பிறந்த நாளின்று!

’’உழைப்பால் உயர்ந்தவர்  சாண்டோ சின்னப்பா தேவர். தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர். யாருக்கெல்லாம் முடியுமோ, யாரெல்லாம் உதவி என்று கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்தவர். எல்லோருக்கும் நம்பிக்கையுடன் நடந்துகொள்வார். மிகவும் நாணயமாக வாழ்ந்தார். இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்’’ என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர். தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தனக்கென, தன் படங்களுக்கென ஒரு பாணியை கட்டமைத்து, திரையுலகில் அழியாப் புகழ் பெற்ற சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கு இன்று பிறந்தநாள். ஆம்.. 1915ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பிறந்த சின்னப்பா தேவருக்கு இன்று 110வது பிறந்தநாள். சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், தமிழ் திரையுலகில் தனது உழைப்பு, தன்னம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியால் அழியாப் புகழ் பெற்ற ஒரு சகாப்தம். ஜூனியர் ஆர்டிஸ்டாகத் தொடங்கி, கோடம்பாக்கத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த அவரது…
Read More
கமல் உருவாக்கிய தசாவதாரம் வெளியான தினமின்று!

கமல் உருவாக்கிய தசாவதாரம் வெளியான தினமின்று!

இப்ப ராஜ்யசபா எம்பியாகிப்புட்ட கமல்ஹாசனின் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படமான 'தசாவதாரம்' இதே ஜூன் 13, 2008 அன்று வெளியாச்சு. ஆஸ்கர் பிலிம்ஸ் ஈவிச்சந்திரன் புரொட்யூஸ் பண்ணிய அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. அந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் அமைச்சிருந்தார் கமல். டைரக்டர் பொறுப்பை மட்டுமே கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருந்தார். அந்தப் படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள் குறிச்சு கே.எஸ்.ரவிகுமார்கிட்டே கேட்டச்சே ,' என் லைஃப்ஃபிலே அதிகமா டென்ஷனாகி ஒர்க் செஞ்ச படம் எதுன்னு கேட்டா அது 'தசாவதாரம்'தான். ஒவ்வொரு ஷெட்டியூலுமே ஒரு படம் எடுக்குற மாதிரிதான். அந்த ஷெட்டியூலில் என்ன கேரக்டர், அதற்கான மேக்கப் என அம்புட்டும் பிளான் பண்ணி சொல்லிவிடுவோம். கமல் சார் ஒரு நாளைக்கு ஒரு கேரக்டர் தான் பண்ணுவார். அடுத்த நாள் தான் அடுத்த கேரக்டர் பண்ணுவோம். ஒரு சீனில் நிறைய கமல் இருக்கும் போது, ஒரு கேரக்டர் எடுத்து முடிச்சுடுவோம். அடுத்த நாள் வேறு…
Read More
இசை இளவரசன் ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இசை இளவரசன் ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

மியூசிக் டைரக்டர், சிங்கர், ஆக்டர், புரொடியூஸர் மற்றும் பின்னணிப் பாடகர். கூடவே "இசை இளவரசன்" என்றும் அழைக்கப்படுற ஜிவி பிரகாஷ் பர்த் டேயாக்கும் இன்னிக்கு! வசந்தபாலன் டைரக்ட் பண்ணிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போஓ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படமாக்கும். கோலிவுட் மட்டுமில்லாம டோலிவுட், சாண்டல் வுட் அப்படீன்னு தென்னிந்திய திரையுலகில், அதிகம் தேடப்படும் இசையமைப்பாளராக மாறிப்புட்டர், ஜி.வி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு அப்படீன்னு படு பிசியான கலைஞராக வலம் வாறார், ஜி.வி. ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களும் சினிமாவிற்குள் நுழைவது போல, சத்தமே இல்லாமல் நுழைந்த இவர், இப்போது இயல்பான இசையிலேயே புதுமையை புகுத்தி இளசுகளின் மனங்களில் பச்செக்குன்னு பர்மெணண்டான ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார்.. . இளையராஜா சாரோட 'அன்னக்கிளி',…
Read More
எம் ஜி ஆர்-ரின் மாஸை  வெளிச்சமிட்டுக் காட்டிய உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான தினமின்று

எம் ஜி ஆர்-ரின் மாஸை வெளிச்சமிட்டுக் காட்டிய உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான தினமின்று

அரசியல் பன்ச் டயலாக்குகள், சீன்கள் வருவதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமா போச்சு. ஜஸ்ட் ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்த நடிகர்கள்கூட, இப்போ தண்ணீர் பந்தல் வச்சுப்புட்டு தன் அடுத்த படத்தில் அரசியல் பன்ச் வைக்கச் சொல்லும் காலமிது. ஆனா, ஒரு படமே அரசியலாக மாறியது எனில் இந்த `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில்தான். எம்.ஜி.ஆர் டைரக்ட் செஞ்சு, புரொயூஸ் செஞ்சு, ஆக்ட்டும் செஞ்ச இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சந்தித்த தடைகளும் பிரச்னைகளும் கொஞ்ச நஞ்ச்சமில்லை. திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அதிமுக என்கிற இயக்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்த சமயம் என்பதால், `உலகம் சுற்றும் வாலிபன்' வெளியாவதற்குப் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளை அப்போதைய திமுக அரசு போட்டுக்கிட்டே இருந்துச்சு. அம்புட்டையும் அடித்து நொறுக்கி, அறிவிச்சப்படி மே 11, 1973-ல் படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். அவருக்கும் அதிமுக-வுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் படம்,.கலர்ஃபுல் படம். ஹைடெக்காக ஓர் கதை. அங்கங்கே, ரகசியத்தைக் கண்டறிய நாடுநாடாகச் செல்லும்…
Read More
தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

சவுத்திலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, நார்த்திலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் கோலிவுட் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி அப்படீன்னு தமிழ் தெரிஞ்ச, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதுதான் உண்மை. தமிழில் மட்டுமே 250 பாடல்களைப் பாடி முடிச்சுப்புட்டார். அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise) கம்…
Read More
error: Content is protected !!