மூன்று தலைமுறை பெண்களின் நகர்ப்புற வாழ்க்கையை எடுத்துரைக்கும் ”ஸ்வீட் காரம் காபி”!

மூன்று தலைமுறை பெண்களின் நகர்ப்புற வாழ்க்கையை எடுத்துரைக்கும் ”ஸ்வீட் காரம் காபி”!

  லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கியது. ஸ்வீட் காரம் காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்களுடன் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு இடமான பிரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான ஸ்வீட் காரம் காபியை 6 ஜூலை 2023 அன்று முதல் ஒளிபரப்பை அறிவித்தது. எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துள்ளது. வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அனஂபு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான வாசனையைக் கண்டறிகின்றனர். ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத்…
Read More
நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

  பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து…
Read More
பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2". இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் "நந்தினி" எனும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகின்றன. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…
Read More
ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக கத்ரீனா கைப் உடன் அவர் நடித்து வரும் மெரி கிறிஸ்துமஸ் படம் மீது பெரிய எதிர்பார்த்து இருந்து வருகிறது. தனது திரைப்பயணத்தில் இது அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும். ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞனாக நடித்து இருக்கிறார். தனது ஏதார்த்தமான நடிப்பினால் இயக்குனரை வெகுவாக கவர்ந்துள்ளாரம். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். அது சின்ன கெஸ்ட் ரோல் மட்டும் தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே ராதிகா ஆப்தே தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Read More
சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆமிர் கான் படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். தனது குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இந்த பிரேக் தேவைப்படுகிறது என்று ஆமிர் கான் தெரிவித்திருந்தார். அதோடு நடிகர் சல்மான் கானை வைத்து 'சேம்பியன்ஸ்' என்ற படத்தைத் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார். பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான் ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் இடையே தற்போது நல்ல உறவு நீடித்து வருகிறது. சமீபத்தில் மூன்று பேரும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமிர் கான் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்கூடியவர். அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாருக்கானும், சல்மான் கானும் 'டைகர் 3' படப்பிடிப்பிலிருந்தனர். படப்பிடிப்பை முடித்துவிட்டே இருவரும் வந்திருக்கின்றனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும்…
Read More
ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

  ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய…
Read More
மாடல் அழகி வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

மாடல் அழகி வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

பிரபல மாடல் அழகியான வைபவி உபாத்யாயா சீரியல், திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சாஹில் சாராபாய் மீது ஈர்ப்பு கொண்ட குஜராத்திப் பெண்ணான சாராபாய் vs சாராபாய் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக 2017 இல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து, சமூக வலைதளங்கலில் பிரபலமானார், சாராபாய் vs சாராபாய் படத்தின் வெற்றியால் வைபவி உபாத்யாயாக்கு ''க்யா கசூர் ஹை ஆம்லா கா'' அனுபமா போன்ற  டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .மேலும், தீபிகா படுகோனே நடித்த சபாக் படத்திலும், திமிர்  படத்திலும், ப்ளீஸ் ஃபைண்ட் அட்டாச்டு என்ற வலைத் தொடரிலும், அகூபர், பா ரிடயர் தாய் சே, மற்றும் கோட் போன்ற பல  சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ,நடிகை வைபவி உபாத்யா தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரின்…
Read More
ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்ப்பவரின் சொத்து மதிப்பு இவ்வளவா!

ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்ப்பவரின் சொத்து மதிப்பு இவ்வளவா!

பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங் என இந்தி திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாய்காட் பிரசாரங்களை கடந்தும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருக்கார் ஷாருக்கான். மேலும் ஒரு படத்திற்காக 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஷாருக், ஏராளமான விளம்பரங்களில் நடித்தும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். அதேநேரம் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி நம் அனைவரையும் தலை சுற்ற வைத்துள்ளது. கடந்த 11 வருடங்களா ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்த்து வாறார் பூஜா தத்லானி. ஷாருக்கானின் நிழலாக பின்தொடரும் பூஜா, கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வருகிரார் . ஷாருக்கானின்…
Read More
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!! "ஆதிபுருஷ்" படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது. கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும்…
Read More
ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

நடிகை ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து தகவவல்கள் அனைத்துமே ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. திருமணம் எங்கு நடக்கிறது என்ற தகவல் கூட மர்மமாகவே இருந்தது. இறுதியில் பாந்த் ராவில் உள்ள ரன்பிர் கபூர் இல்லத்தில் இத்திருமணம் நடந்தது. திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலரே அழைக்கப்பட்டனர். தனது திருமணம் குறித்து ஆலியா பட் முதல் முறையாக நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. நான் சோசியல் நிகழ்ச்சிகளை அதிகமாக விரும்பமாட்டேன். அதனால் மிகவும் அபூர்வமாகவே வெளியில் பார்ட்டிகளுக்கு செல்வேன். யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டேன். கலகலப்பாகவும் இருக்க மாட்டேன். அதனால் தான் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர். எனக்கு உண்மையாக மிகவும் விரிவாக பேசவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில்…
Read More