இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” – இசைத் திரைப்படம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” – இசைத் திரைப்படம்!

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைவாயிலாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமேரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி,…
Read More
அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற  தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான 'வம்சம்' முதல் 'ஆறாது சினம்' திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக  பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது…
Read More
“இது வேதாளம் சொல்லும் கதை”

“இது வேதாளம் சொல்லும் கதை”

நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் "இது வேதாளம் சொல்லும் கதை" அஸ்வின் ககாமனு (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ ) குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர் )மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்துள்ளனர். மேலும் பிரபல குத்துசண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான கிரஃ புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார். படத்தில் பிரபல நடிகர் ஒருவருக்கும் முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கிறது. படம் வெளியாகும் வரைக்கும் அந்த நடிகர் யாரு என்கிற விஷயம் ரகசியமா வைக்கப்படும். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தோட பின்னணி இசையை இயற்ற ஆரம்பிச்சிட்டார். சர்வதேச விருதுகள் பல பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர்..இவர் இயற்கை நிலப்பகுதிகளை பதிவு பண்ணுவதில் கைத்தேர்ந்தவர். பாங்காங்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த படத்தோட விஷுவல் எபக்ட்ஸ்…
Read More
மின்வெட்டை மையமாக கொண்டு  தயாரான ‘கனவு வாரியம்’

மின்வெட்டை மையமாக கொண்டு தயாரான ‘கனவு வாரியம்’

ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் "கோல்ட் டிக்கர்ஸ்.' வசூலை அள்ளிக் குவித்த "மேட்ரிக்ஸ்', "ஹாரி பார்ட்டர்', "பேட்மேன்' போன்ற பல படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.   இந்த நிறுவனம் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு முன், பாலிவுட் படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களை இதுவரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டதில்லை. தமிழ்ப்படத்தின் பெயர் "கனவு வாரியம்.' தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்வெட்டை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது.   காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாவும் நடிக்கிறார்…
Read More
சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை பாலிவுட்டில் உருவாகி ஹிட்டானது. சில்க்காக வித்யா பாலன் நடித்தார். இதையடுத்து முக்கிய நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க அவ்வப்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கின்றனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை தற்போது படமாகிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய்தத்தின் தாய் நர்கிஸ். இவர் பிளாக் ஒயிட் காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மனிஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நர்கிஸ் நியூயார்க் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மனிஷா கொய்ராலாவும் சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நர்கிஸ் அப்போது சிகிச்சை பெற்ற அதே நியூயார்க் மருத்துவமனையில் மனிஷாவும் தங்கி சிகிச்சை பெற்றார். கேன்சர் வலி குறித்து மனிஷாவுக்கு நன்கு தெரியும் என்பதால் நர்கிஸ் பாத்திரத்துக்கு அவரை தேர்வு செய்ததாக இயக்குனர் தெரிவித்தார். நிஜத்தில் அனுபவித்த வேதனையை…
Read More
காமெடி + திகில் நிறைந்த   ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

காமெடி + திகில் நிறைந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ்  திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்ப டத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை யும், 'யுடியூபில்' 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திகில் - நகைச்சுவை கதைக்களங்களில் உருவான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று, புதியதொரு சாதனையை இந்த திரைப்படம் பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த பாணியில் இந்நாள் வரை வெளியான மற்ற…
Read More
‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !

‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !

வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து வரும்  திரைப்படம் '8 தோட்டாக்கள்'.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர்  கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம்' 'கிரகணம்'), கலை இயக்குநர் சதீஸ் குமார் ('ஜோக்கர்', வி ஐ பி 2) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. "எங்கள் படத்தின் ஒரு பாடலுக்கு, திருவிழாவை போன்ற காட்சிகள் தேவைப்பட்டது. அதற்காக  எங்களின் கலை இயக்குநர் சதீஷ்…
Read More
சர்வர் சுந்தரம் டீசரே இம்புட்டு ஹிட்டா? – மகிழ்ச்சியில் இயக்குநர்

சர்வர் சுந்தரம் டீசரே இம்புட்டு ஹிட்டா? – மகிழ்ச்சியில் இயக்குநர்

கிட்டத்தட்ட 53 வருஷங்களுக்கு முன்னால் நாகேஷ், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து, கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த படம், 'சர்வர் சுந்தரம்.' அந்த படத்தின் கதையை கே.பாலசந்தர் எழுதியிருந்தார். தர்போது அதே பெயரில் காதல் - அதிரடி - நகைச்சுவை - செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் சந்தானம் - வைபவி ஷண்டிலியா முன்னணி கதாபாத்திரங்களிலும், நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். "நாங்கள் எதிர்பார்த்ததை விட…
Read More
இரண்டு எமதர்ம ராஜாக்கள்” ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

இரண்டு எமதர்ம ராஜாக்கள்” ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் 'எமன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள 'சத்யம்' திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற  இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் எ சந்திரசேகர், 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன், 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா, 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்' மதன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, 'ஐங்கரன்' கருணாஸ், காட்ராகட பிரசாத், 'கே ஆர் பிலிம்ஸ்' சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என் ஆனந்த் (இந்தியா - பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனன்ஜயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் 'எமன்' படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' ராஜு மகாலிங்கம்,…
Read More